இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
7. கண்ணனைப் பற்றி பாரதி 255
"தின்னப்பழம் கொண்டு தருவான் - பாதி
தின்கின்ற போதில் தட்டிப் பறிப்பான்”
“தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்ன
செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்.”
"பின்னலைப் பின்னின்றிழுப்பான் - தலை
பின்னே திரும்பு முன்னே சென்று மறைவான்,
“புல்லாங்குழல் கொண்டு வருவான் - அமுது
பொங்கித்ததும்பு நற்கீதம் படிப்பான்”
என்றெல்லாம் பாரதி பாடுகிறார் இன்னும்,
"விளையாட வாவென்றழைப்பான் - விட்டில்
வேலையென்றால் அதைக் கேளாதிருப்பான்,
"அம்மைக்கு நல்லவன் கண்டீர்- மூளி
அத்தைக்கும் நல்லவன், தந்தைக்கும் அஃதே!
“எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - விட்டில்
யாவர்க்கும் நல்லவன் போல் நடிப்பான்
'கோளுக்கு மிகவும் சமர்த்தன் - பொய்மை
சூத்திரம் பழி சொலக் கூசாச் சழக்கன்
“ஆளுக்கிசைந்தபடி பேசி - தெருவில்
அத்தனை பெண்களையும் ஆகாதடிப்பான்