இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
விண்ணில் நாரைக் கூட்டம் விரையும் வரிசை போலே மண்ணில் ஓடும் ஓடை மணிநீர் கரையில் எங்கும்.
காட்டு மலர்கள் காதல் களிப்பைக் கண்ணில் ஊட்டும், வீட்டுப் பூக்கள் குழந்தை விழியாய், இதழாய் மலரும்,
எழுந்து வாரீர் எங்கும் இளவேனில் பெண் ஆடல் விழுந்த வான்வில் கோடி விளையாடல்போல் காணீா்!
48