இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
உருசியப் புரட்சி
மக்கள் பாடிடும் மாண்புடைப் பாடலால்
மகிழ்ச்சி நெஞ்சில் விழிப்புறும்,
மக்கள் எத்தனைக் காலம் காலமாய்
மன்னர் தம்கதை கேட்குவார்?
மண்ணின் சூலிருந்து இன்ப ஞாயிறு
வானில் பேரொளி தந்தது!
விண்ணினின்று வீழ்வுற்ற மீன்களை
எண்ணி வெம்பிடல் ஏனடா?
தன்னைப் பின்னிய தளைகள் யாவையும்
தகர்த்தல் மாந்தன் இயற்கையே,
முன்இ ழந்தஓர் உரிமை நாட்டினை
வென்றிடாது இன்னும் வீழ்வனோ?
49