இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிறகுகள் உதறு
சமுதாயம் எனும்
தன்னிகர் இல்லாச்
செம்புட் பறவையே
உன்மீதில்,
சுமைசுமை யாக
வேற்றுமை என்னும்
தூசு நிறைந்து
படிந்துளதே.
இமைக்கும் முன்னர்
சிறகுகள் உதறி
எழுவாய் உயர்வில்
எழுவாயே!
81