பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     சிறகுகள் உதறு

     சமுதாயம் எனும்
     தன்னிகர் இல்லாச்
     செம்புட் பறவையே
     உன்மீதில்,

     சுமைசுமை யாக
     வேற்றுமை என்னும்
     தூசு நிறைந்து
     படிந்துளதே.

     இமைக்கும் முன்னர்
     சிறகுகள் உதறி
     எழுவாய் உயர்வில்
     எழுவாயே!

81