பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     ஆற்றல்

     எவன் ஒருவன் இவ்வுலகில்
     தன்னுள் ளத்தே
     இருக்கின்ற பண்புகளை
     அறிகின்றானோ,

     எவன் ஒருவன் தனக்குள்ள
     திறமை தன்னை
     எழுஞாயி றாகத்தான்
     உணர்கின் றானோ,

     எவன் ஒருவன் பழமையிலே
     புதுமை வித்தை
     இங்கங்கும் எவ்விடத்தும்
     இறைக்கின்றானோ,

     அவன் ஒருவன் இறையொளியின்
     முகவன் ஆவான்;
     அவனாற்றல் எவனாலும்
     தடுக்கொணாதே,

82