பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 23

மகிழ்வின் புதுக்கனவுடன் அங்கிருந்து கிளம்பினான் அம்பலத்தரசன், உடன்’ என்று அவள் சுட்டிய அவசரம் அவனது உள்ளத்தின் உள்ளே பரபரப்பை ஊட்டிக் கொண்டேயிருந்தது.

பட்டணம் ராஜகம்பீரத்துடன் பொலிந்தது

[10]

உள்ளம், உணர்ச்சி, அறிவு ஆகிய மூன்று புள்ளி களைச் சேர்த்து முக்கோணமாக உருவாக்கிக் கொண்டி ருந்தது அம்பலத்தரசனின் மனச்சாட்சி.

பிராட்வே விதியில் அவன் நடை தொடர்ந்தான்.

விசாலமாக இருந்த அவனது மனவீதியில் எண்ணங்கள் தொடர்ந்தன.

நிலவொளியை அழுத்திவிட்டது மின்னொளி.

நல்லவேளை, காற்றைப் பொறுத்தமட்டில் இயற்கை தான் கொடிகட்டிப் பறந்தது.

புதிய புதிய கனவுகளும் புதிய புதிய கவலைகளும் அவனுடைய,மனச் சான்று அமைந்திருந்த முக்கோணத்தில் உள் வட்டமாகச் சுழன்று, தவித்துக் கொண்டிருந்தன. இரண்டுங் கெட்ட அந்தச் சிக்கவில் திக்கு முக்காடிய அவன் ஒரு கணம் அப்படியே செயலற்று நின்றான்.

அவன் மெய்யுணர்வு எய்திய தருணத்தில் வாழ்க்கை ஒரு செஸ் விளையாட்டு ‘ என்று ஆங்கிலப் படத்தின் சுவரொட்டி விளம்பரம் அவ ன் திருஷ்டியில் பட்டு விலகியது. -