பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

அப்போது மீனாட்சி அம்மாள் ஒர் இலையுடனும், எவர்சில்வர் பிளேட்டில் பிரியாணியுடனும் அங்கு வந்து, நீங்க சாப்பிடுங்க ஊர்வசிக்கு இதோ தனியே வைக்கி றேன்’ என்று கூறினாள்.

ஊர்வசியும், அம்பலத்தரசனும் ஒருவரையொருவர் அர்த்த புஷ்டியோடு பார்த்துச் சிரித்தவாறு, சாப்பிடத் தொடங்கினார்கள்.

மீனாட்சி அம்மாள் உள்ளே போய்விட்டாள்.

அவன் தன் இலையிலிருந்து அவள் இலையில் கொஞ்சம் பிரியாணியை அள்ளிப் போட்டான்.

அவள் மகிழ்வின் நிறைவுடன் அதை உண்டாள்.

“நான் போட்டேனே அதற்குப் பதிலா நீ எனக்குத் தரவே னாமா?....

அவனை அவள் வெட்கத்துடன் நோக்கினாள்.

‘இது எச்சில்!” என்றாள்.

“இனிமேல் எச்சில் நம்மளைக் கடந்ததாக்கும்! இல் லையா ?”

அவள் கூ டுதலாகவே தன் இலையிலிருந்து பிரியாணியை எடுத்து அவன் இலையில் வைத்தாள்.

"எனக்குத்தான் லாபமாக்கும்!”

‘ஊஹாம், எனக்குத்தான்!”

'எப்படி?”

'உங்க அன்பை நான் அடையக் கொடுத்து வச்சதிலே எனக்குத்தானுங்கனே லாபம்?”

"அப்படியா? நம் இருவர் அன்பும் அப்படிப் பார்த்தால் லாப நஷ்டம் கடந்தது! ஆமாம், ஊர்வசி!"