பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64


ஆம்; அழகு தவக்கோலம் பூண்டிருந்த வேளை அல்லவா ? .

தறிக்கெட்டுச் சுழன்ற அவனது உள்ளம், இயற்கையின் மோகனக் கவர்ச்சியில் முழுமையாக ஒட்ட மறுத்தது. திரும்பத் திரும்ப, நாடக நாயகிதான் அவன் இதய அரங் கத்தில் தோன்றிச் சுழன்று கொண்டிருந்தாள். ஊர்வசி’ எத்துனை இயற்கையாக நடித்தாள் - கதைத் தலைவி சுந்தரியாகவே மாறி விட்டாளே ? பரிதாபத்துக்குரிய பெண் அவள் - கதையில் அனுதாபத்துக்குரிய பெண் அவள் - நாடகத்தில் அவன் மனம் தனக்குத்தானே பேசிக் கொண்டது.

பேச்சின் ஒலியும் எதிரொலியும் தடம் தேய்வதிற்குள் அவனுக்கு அன்று காலை வந்த அன்னையின் கடிதம் நினைவுக்கு வந்து விட்டது. ஏதேதோ சிந்தனை விரிச லுடன் ஒர் அரைக்கணம் அவன் தவயோகியின் நிலைப் பில் கண் மூடி நின்றான், நிலவின் சீதளத்தை அவனால் நன்கு உணர முடிந்தது.

டெலிபோன் மணி கன கண’ வென்று சத்தமிட்டது. தவம் கலையப் பெற்ற பரிதவிப்புடன், கண்களைத் திறந் தான். அம்பலத்தரசன். இமைகள் படப்படத்தன

‘மணி பத்து இருபது என்று சொன்னக் கைக்கடி காரத்துக்கு மானசீகமாக நன்றி சொல்லிவிட்டு, அழைத்த தொலை பேசியை நாடி விரைந்தான் அம்பலத்தாசன், ஸ்பீக்கிங் ஹியர் ஒ. பூ காரியால்யங்களா! சந்தோஷம் ட்ராமா ரெவ்யூதானே ? எழுதி முடிச்சிட்டேனே ஒரு க்ளான்ஸ் பார்த்திட்டுக் கொண்டு வரலாம்னு ஸார் . ஆமாம், விமர்சனத்தோடதான் ! . ஒகே ! பேசி முடித் தான். செய்தி வாங்கியை அதற்குகந்த இருப்பிடத்தில் பொருந்திய சத்தத்தை அவன் காதுகள் ஏற்றுக்கொண்ட அதே நேரத்திலே, மாடிக்கதவுகள் படபட” வென்று.