பக்கம்:இங்கே ஸ்ரீராமன் தீக்குளிக்கிறான்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73


தானே ஆகிவிட்டது” என்று சமாளித்துக் கொண்டான். பிறகு, ஊர்வசியின் நடிப்பைப் பத்திச் சொல்லனும் இல்லீங்களா? ரொம்பவும் அற்புதமாய் நடிச்சாங்க; நீங்க ஊர்வசியைக் கெடுக்க எத்தனம் செய்த போதும், அந்தக் கண்டத்திலிருந்து தப்பிக்க அவங்க பட்டபாடும், பின்னாலே அந்தப் பழியிலிருந்து தப்ப வழியில்லாமல் கெடுக்கப்பட்டதை அறிஞ்சதும் அவங்க தன்னோட நிலைமையை எண்ணி மூச்சு விடாமல் கண்ணிர் வடிச்சதும் ரொம்பவும் இயல்பாய் இருந்திச்சு, அந்தப் பயங்கரக் காட்சிகளைக் கண்டதும் எனக்கு உங்களைக் கொன்று போட்டுப்பிட வேணும்னு ஒரு கொடுமையான ஆத்திரம்கூட வந்திச்சு. அவ்வளவு தொலை வுக்கு என் மனம் சலனம் அடைஞ்சிடுச்சு. ஒரு பெண்ணைத் கற்பழிக்கிறதும், ஒரு பெண் கற்பழிக்கப்படுறதும் எத்துணை பெரிய கொடுமை என்கிறதை நிதர்சனமாய் என்னாலே காண முடிஞ்சது.”

‘நல்லவேளை ; நான் பயந்து விட்டேன், சற்று நேரத்துக்குள்ளே!வாஸ்தவமாகவே, எனக்கு அந்தக் கட்டத்தில் நடிக்கவே மனசில்லே. கலையார்வத்தினாலே தான், ஊர்வசியைக் கற்பழிக்கும் பாகத்தை ஏற்க வேண்டியிருந்துச்சு."

பூமிநாதனின் கண் கடையில் ஈரம் இருந்தது.

“நல்ல உள்ளம் படைச்ச உங்களுக்கு ஒரு சோதனை போலத்தான் அந்த நிகழ்ச்சி - அந்த நடிப்பு - அமைந் திருச்சு. கலையம்சத்தைப் பொறுத்த மட்டிலே உங்களுக்கு அந்நடிப்பு ஒரு வெற்றியாகவே அமைந்திடுச்சுங்க, மிஸ்டர் பூமிநாதன்" என்று நிறுத்தினான் அம்பலத்தரசன்.

பூமிநாதன் பேசிய பேச்சுக்கு இயந்திர ரீதியாகப் பதில் சொன்னானே தவிர, அவன் மனத்தில் சற்று முன்னம் தன் அறையில் நிகழ்ந்த அந்த 'அடைக்கலக் காதை'யின்