பக்கம்:இசையமுது 1, 1984.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 கூடை முறம் கட்டுவோர் கசங்கு சீவடி பிரம்பு செற்றடி கைவேலை முடித் திடலாம் - நம் பசங்கள் பசிக்கு விரைவில் சென்றால் பழயதைக் கொடுத் திடலாம் பிசைந்து வைத்துள மாவும் தேனும் பீர்க்கங் கொடியின் ஓரம்-அந்த உசந்த பானை திறந்து கரடி உருட்டிடும் இந்த நேரம் கூடை முறங்கள் முடித்து விட்டேன் காடை இறக்கை போல-இனி மூடு தட்டும் குழந்தை மூச்சிலும் முடிப் பதுதான் வேலை காடு வெட்டவும் உதவி யில்லாக் கழிப்புக் கத்தியைத் தீட்டி-நீ ஏடு பத்தாய் மூங்கில் பிளக்க எழுந்திரு கண் ணாட்டி சோடி யாக நா மிருவர் கூடி உழைக்கும் போது நம் ஓடும் நரம்பில் உயிர் நடப்பதை உரைத்திடமுடி யாது டி நிறுத்தி நீகொடுத்திடும் பாக்கு வெற்றிலைச் சருகும்-அத் னோடு, பார்க்கும் பார்வையும் என் உயிரினை வந்து திருகும். இசையமுது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/13&oldid=1443328" இலிருந்து மீள்விக்கப்பட்டது