பக்கம்:இசையமுது 1, 1984.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் பகுத் தமிழ்ப் பள்ளு ஆடுவமே பள்ளுப் பாடுவமே!-தமிழ் ஆட்சியின் மாட்சியில் கூடுவமே கோடுயர் வேங்கடக் குன்றமுதல்-நல்ல குமரிமட்டும் தமிழர் கோலங் கண்டே நாம்--ஆடுவமே... மானிடம் என்னுமோர் ஆதிப்பயிர் - தமிழ் மக்களென் றேகுதித் தாடுவமே! கானிடை வாழ்ந்திட்ட மனிதர்க்கெலாம்- நல்ல கதியினைக் காட்டினர் தமிழ ரென்றே நாம் - ஆடுவமே.. மூலமென்றே சொல்லல் முத்தமிழாம் புவி மூர்க்கம் தவிர்த்ததும் அப் புத்தமுதாம்! ஞாலமெலாம் தமிழ், தமிழர்களே- புவி நாம் எனவே குதித்த தாடுவமே! நாம்- ஆடுவமே... வானிடை மிதந்திடும் தென்றலிலே-மணி மாடங்கள் கூடங்கள் மீதினிலே, தேனிடை ஊறிய செம்பவழ-இதழ்ச் சேயிழை யாரொடும் ஆடுவமே நாம்- ஆடுவமே... கவிதைகள், காவியம், உயர்கலைகள்- உளம் கவர்ந்திடும் சிற்பமும் சிறந்தனவாம் ஆடுவமே... 88. குவிகின்ற பொன்பொருள் செந்நெல்லாம்-இங்குக் குறையில் வாம்என் றாடுவமே நாம் - ஆடுவமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_1,_1984.pdf/36&oldid=1446152" இலிருந்து மீள்விக்கப்பட்டது