பக்கம்:இசையமுது 2, 1952.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரண்டாம் பகுதி ஆடவந்தாள் அவன்: 3 ஆடற் கலைக்கழகு தேடப் பிறந்தவள் ஆடாத பொற்பாவை ஆடவந்தாள்; என்னோ டாட வந்தாள் ; மகிழ்ந் தாட வந்தாள்! (ஆ) வாடாத தாமரைக்கை வானில் ஒளி தெறிக்க மங்காத செங்காந்தள் விரல்கள் பொருள்குறிக்க ஓடுபிளந்தசெம் மாதுளைபோல் உதட்டில் உள்ளம் விளைத்தநகை மின்னவும்- கா தோரத்து வண்டுவிழி ஓடைமலர் முகத்தில் ஓடிஎன் உளங்கவர்ந்து தின்னவும் காடு சிலிர்க்கும்படி மேலாடு முன் தானை காற்றோடு காற்றாகப் பின்னவும் (-3) காதற் கரும்பொன்று காலிற் சிலம்பணிந்து கடிதில் இடை துவள ஆடியதோ என்னவும் (ஆ) அவள் : பொன்மேனி காட்டிஎனை இன்பத்தில் ஆழ்த்தினான் பூரிப்பிலே எனையும் ஆடவைத்தான் தன்னோ டாட வைத்தான் மகிழ்ந் தாட வைத்தான் (QLIT)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/12&oldid=1498475" இலிருந்து மீள்விக்கப்பட்டது