பக்கம்:இசையமுது 2, 1952.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தமிழ்த் தொண்டு இசையமுது இயற்கை அன்னை அருளிய இன்தமிழ்! அயல்மொழி வேண்டாஆர் எழில் சேர் தமிழ் ! நிறைதமிழ் / இந்நாள் நெடுநிலம் முழுதும் குறைவில தென்று குறிக்கும் தனித்தமிழ்! தமிழர் வாழ்வின் தனிப் பெருமைக்கும் அமைந்த சான்றாம் அமுதுநேர் செந்தமிழ் ! அந்த நாளில் அறிவுசால் புலவர் எந்தநாள் தோன்றிய தோ எனும் பழந்தமிழ்! தமிழ்நாடு பலப்பல தடுப்பரும் இன்னலில் அமைந்தும், அணுவும் அசையாப் பெருந்தமிழ் ! தமிழை அழித்தல் தமிழரை அழிப்பதென்று- இமையாது முயன்ற அயலவர் எதிரில், இறவாது நிற்கும் ஏற்றத் தமிழின் பெருநிலை எண்ணுக தமிழ்ப்பெரு மக்களே ! அருஞ் செல்வர்கள் அன்று தொடங்கி இன்று வரைக்கும் ஈந்து வந்துள்ள பொன்றா ஆதரவு—அன்றோ காரணம்? அயல்மொழி எல்லாம் அண்டையில். கண்ணெதிர் வியக்கு முறையில் மேன்மை பெற்றன; என்ன முயற்சி! எத்தனை ஆர்வம்! இன்ன வண்ணம் இருக்கையில், நம்மவர் தமிழிடம் காட்டும் தயவு போதுமா? தமிழ்த்தாய் பூசை போதுமா? சாற்றுக! தமிழர் பொருளெலாம் தமிழுக்குத் தந்தார்"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இசையமுது_2,_1952.pdf/36&oldid=1500216" இலிருந்து மீள்விக்கப்பட்டது