இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10
அறிஞர் அண்ணாவின் இச்சிறு நூல் திராவிடர்களிடை புது மலர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்ற நன் நோக்கத்தோடு வெளியிடப்படுகிறது. அன்பர்கள் ஆதரிப்பார்களாக.
இச்சிறு நூலை வெளியிடும் உரிமையை மனமுவந்து எனக்களித்த அண்ணா அவர்களுக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.
வழக்கை திறமையாக வாதித்து வெற்றியைத் தேடித்தந்த பெருமைக்குரிய இரு வழக்கறிஞர்களான எப். ஜி. ஜகனாதன், துரைராஜ் ஆகிய இருவர்களையும் திராவிடர் என்றும் மறவார்.
வணக்கம் !!
அன்பன்
காஞ்சி. கல்யாணசுந்தரன்