பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11



சென்னை சர்க்கார்

பப்ளிக் (ஜெனரல்-எ) இலாகா

1931-வது ஆண்டு இந்திய பத்திரிகை (அவசரச்) சட்டத்தின் 7-வது பிரிவைச் சேர்ந்த (3)-வது உட் பிரிவின் படிக்கான நோட்டீஸ்.

செங்கற்பட்டு ஜில்லாவைச் சேர்ந்த காஞ்சிபுரத்திலிருந்து வெளிவரும் "திராவிட நாடு" என்ற பத்திரிகையின் 1948-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4, 18-ந்தேதிய இதழ்களில் 1931-ம் ஆண்டு இந்திய பத்திரிகை அவசரச் சட்டத்தின் (1981-ம் வருடத்திய 23-வது மத்திய சட்டம்) நிபந்தனைகளின் படிக்கு பத்திரிகை ஜாமீன் கோரப்பெற்றிராதவை—மேற்படி சட்டத்தின் 4 (1) (யெச்) பிரிவின் கீழ் விவரிக்கப்படும் தன்மை வாய்ந்த விஷயங்கள் அடங்கியிருந்ததாக சென்னை சர்க்கார் கருதுவதால்,

மேற்படி சட்டத்தின் 7 (3)-வது பிரிவு தரும் அதிகாரத்தைக் கொண்டு மேற்படி பத்திரிகையின் வெளியீட்டாளராகிய ஸ்ரீ. சி. என். அண்ணாதுரை செங்கற்பட்டு மாவட்ட நீதிபதியிடம் 1949-வது ஆண்டு ஜூன் 25-ந்தேதி அன்றோ அதற்கு முன்போ ரூ.3,000 தொகையாகவோ அல்லது அதற்கு சமமான மத்திய சர்க்கார் பத்திரங்களாகவோ ஜாமீன் கட்டியாக வேண்டுமென்று மேன்மை தங்கிய கவர்னர் இதன் மூலம் உத்தரவிடுகிறார்.

(மே.த.கவர்னர் உத்தரவுப்படி)
(சி. கே. விஜயராகவன்.)
சர்க்கார் பிரதம காரியதரிசி.