பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரும்பினர்; அவர்களைக் காமர்ர்டுகளே என்று ஜெர்மன் மொழியில் அழைத்தனர்; அவர் கள் எதற்காகப் போரிட்டுக் கொண்டிருந்தனர் என்று அவர்களிடமே கேட்டனர். ஒரு வயதான போர்வீரர் இந்த உள்ளத்தைத் தொடும் காட்சியைச் சற்று நேரம் பார்த்தார்; பிறகு தமது சகாக்களை நோக்கி இவ்வாறு கூறினார்: ' நீங்கள் உங்கள் காமராடுக ளின்" மீது உணர்ச்சிமயமான ஒப்பாரியைப் பொழிந்து கொண்டிருக் கிறீர்கள், நிச்சயமாக இங்கு அவர்கள் எல்லாம் காம்ரேடுகளாகத் தான் உள்ளனர்; ஆனால் இதே காம்ரேடுகளை போர்முனைக்கு அப்பால் அவர்கள் பக்கத்தில் நீங்கள் பார்க்க வேண்டும்; அவர்கள் நமது காயம்பட்ட போர்வீரர்களுக்கும், சிவிலியன் மக்களுக்கும் என்ன கொடுமை இழைக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும்!' இவ்வாறு கூறிவிட்டு அவர் போய் விட்டார், எங்கள் முகத்தில் பனிக்கு ளிர் மிக்க ஒரு வாளித் தண்ணீரை வார்க் கொட்டியதைப்போல் நாங்கள் உணர்ந்தோம்.

    • விரைவிலேயே நாங்கள் தாக்குதலில் இறங்கினோம்.

அப்போது அங்கு நான் கண்ட காட்சிகள் உண்மையிலேயே படு பயங்கரமாகவே இருந்தன! தரைமட்டமாகச் சுட்டுப் பொசுக்கப் பட்டிருந்த கிராமங்கள்; நூற்றுக்கணக்கில் கொன்று குவிக்கப் பட்டிருந்த பெண்கள், பிள்ளைகள், முதியவர்கள்; யுத்தக் கைதிகளின்-எங்களது சொந்த சோவியத் போர்வீரர்களின்--- உருக்குலைத்துச் சின்னாபின்னமாக்கப்பட்ட சடலங்கள்; கற்பழிக்கப்பட்டு மிருகத்தனமாகக் கொலை செய்யப்பட்ட மாதர்கள், இளம் யுவதிகள், வெறும் சிறுமிகள்.....

  • 'அவர்க ளில் ஒருத்தியை மட்டும் நான் என்றுமே மறக்க "

மாட்டேன், அவள் ஏறத்தாழப் பதினோரு வயதுக் குழந்தையாக இருந்தாள், அவள் தனது பள்ளிக் கடத்துக்குச் சென்று கொண் டிருந்தாள் போலும். ஜெர்மானியர்கள் அவளை வழியில் பிடித்து, அவளை யாரோ ஒருவரது வீட்டுத் தோட்டத்துக்குள் இழுத்துச் சென்று, அவளைக் கற்பழித்தனர்; பின்னர் அவளைக் கொன்றும் விட்டனர், சின்னஞ்சிறுமியான - அவள், குழந்தைப் பருவத்தைக்கூடத் தாண்டாத அவள் , மிதித்துத் துவைக்கப்பட்ட ஓர் உருளைக்கிழங்குப் பாத்தியில் பிணமாகக் கிடந்தாள், அவளைச் சுற்றிலும் அவளது பள்ளிப் புத்தகங்கள் ரத்தத்தால் நனைந்து சிதறிக் கிடந்தன. அவர்கள் அவளது முகத்தை ஒரு பெரிய வாளால் வெட்டிப் பிளந்திருந்தார்கள்: அது படுபயங்கரமாக உருக்குலைந்திருந்தது............தனது கையில் அந்தச் சிறுமி தனது திறந்த பள்ளிக்கூடப் பையைப் பற்றிப்

பிடித்திருந்தாள். நாங்கள் அவளது உடலை ஒரு கோட்டைக்

111