உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய பேரிகை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி. 33 வெளிவந்த செய்தி! வெளிவராத செய்திகள் ஆயி ரக் கணக்கில் உள்ளன இங்கே! கொளும்பு சிறுமி கோர்ட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டாள். நீதி மன்றத்துக்குச் செல்லாத வழக்குகள் எத்தனை எத் தனையோ இங்கு! கிராமங்களிலே பண்ணைக்காரர் களின் வீடுகளிலே பார்க்கமுடிகிறது நம்மால், கொளும்புக் கொடுமையை! மாட்டுக்காரர்களாக-கூப்பிட்ட குரல் கேட்கும் வீட்டுக் கூலிகளாக - அடிமைப்பட்டுக் கிடக்கும் ஆதிதிராவிட சிறுவர்களை அந்தச் சீமான் வீடுகளி லே காணமுடிகிறது. கொளும்புச் சிறுமியைப் போல அவர்கள் வதைக்கப்படுவதையும் காணமுடி கிறது. சிறு குற்றம் செய்திருப்பான்; மரத்திலே கட்டிவைத்து மண்டையைப் பிளப்பார்கள். சாட் டையை ரத்தத்தில் நனைப்பார்கள். எலும்புகளைப் பிய்த்துவிடுவார்கள். எத்தனை காரமான வசைவுகள் எ த்தனை கடுமையான தாக்குதல்கள். யார்மீது? இளைஞர்கள் மீது! ஏழு, எட்டு, ஒன்பது என்ற வயதுள்ள சிறுவர்கள்மீது! நடக்கி றதுஇ ஙகே இந்த நாசம். கேட்பாரில்லை இவைகளை! கொளும்பிலேகூட கோர்ட்டுக்குள் போய்த் தான் நீதிபெற முடிந்தது. இங்கோ கோர்ட்டுக்குப் போக முடியாதவர்களாக இருக்கிறார்கள். கொளும் பிலே - இங்கே -ஏன், எங்குமே, இந்தக்கொடிய செய்கை நடைபெறாமலிருப்பதற்கு வழிவகுக்கப் படவேண்டும். அரசாங்கம் அதற்கான செயல்களில் வ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_பேரிகை.pdf/34&oldid=1688697" இலிருந்து மீள்விக்கப்பட்டது