உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதய பேரிகை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி 'இலட்சியவாதி அழுத கண்ணீர், 1.29 கேள்விக்குறியல்ல பதில். இதோ வளர்ந்து நிற்கிறதே நமது சக்தி, துதான் லட்சியவாதி யின் கண்ணீருக்குள்ள உண்மையான பலம். வளர்ந்திருக்கிறோமென்றால் மாகவா? சாதாரண காட்டாற்று நீரைப்போல கட்டுப்பாடில் லாமலா? அமைப்பு தெரியாத அரிச்சுவடிகளை வைத்துக்கொண்டா ?...... இல்லை இல்லை....... நாலா திட்டவட்டங்களோடு - திராவிடத்தின் பகுதிகளிலும் -திறன்மிக்கவரை செயலாற்றுகிறவர் களாகக்கொண்டு செழித்தோங்கியிருக்கிறோம். மாவட்டந்தோறும் கழக மாநாடுகளை நடத்தி முடித்துவிட்டு, மாநில மாநாட்டுக்கான முயற்சியி லே ஈடுபட்டிருக்கிற நாம், சென்ற இரண்டு ஆண்டு களை ஒருமுறை சிந்தையில் நிறுத்திப் பார்த்தால் எவ்வளவு பூரிப்பு பொங்குகிறது. குதூகல உருவங்க ளாகிவிடுகிறோம் நாம். கண்ணீர்த்துளிகளாகிய நாம் எவ்வளவு கண்யத்தோடு கடமையாற்றியிருக் கிறோம் என்ற களிப்பால் துள்ளி விளையாடுகிறது உள்ளம். வந்துபோன வடநாட்டு மந்திரிகளனைவரும் கட லெனக் குமுறிய கருங்கொடிப் பட்டாளத்தைக் கண்டு கதிகலங்கிப்போயினர். குதிரையின் குளம்படிகள் நம் கொள்கை வீரர் கள் உடலிலே அழுந்தியுங்கூட குன்றத்தூர் வேட்டுச் சப்தம் கிளம்பியுங்கூட - நாரணமங்கலம் நடந்துங்கூட-தேனீயிலே திருவிளையாடல் புரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இதய_பேரிகை.pdf/8&oldid=1688626" இலிருந்து மீள்விக்கப்பட்டது