பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

விடுதலைப் போரில் தமிழ் பத்திரிகைகள்


ஜீவாதான் பிற்காலத்தில் ‘தாமரை’ என்ற பத்திரிகைக்கும் ஆசிரியராக இருந்த பொதுவுடைமைச் சிற்பி ஆவார்.

இராஜாஜியின்

‘விமோசனம்’

இந்திய விடுதலைப் போரில் அண்ணல் காந்தியடிகளின் சிந்தனைகளுக்குத் திறவுகோலாக விளங்கிய சக்கரவர்த்தி இராசகோபலாசாரியார் திருச்செங்கோடு ஆசிரமத்தில் தங்கியிருந்த 1927-ஆம் ஆண்டில், ‘விமோசனம்’ என்ற பத்திரிகையை மதுவிலக்குக் கொள்கைக்காக நடத்தினார்.

சது.க. யோகி

‘பாலபாரதி’

விடுதலைப் போர் வித்தகளுானியருள் ஒருவரான ச.து.சு. யோகி என்பவர், சிறுவர் சிறுமிகளுக்கு தேசிய உணர்வையூட்டிட ‘பாலபாரதி’ என்ற பத்திரிகையில் இளைஞர்களின் தேசியக் கடமைகளை வலியுறுத்தி நடத்தினார்.

பாவலர் நடத்திய

‘தேசபந்து’ இதழ்

சுதந்திரப் போராட்ட வீரர்களுள் ஒருவரான தே.பொ. கிருஷ்ணசாமி பாவலர் என்பார், ‘தேசபந்து’ என்ற பத்திரிகையைத் துவக்கித் தேசத் தொண்டாற்றினார்.

‘இந்துநேசன்’, ‘பாரதி’, ‘சுதந்திர வீரன்’, ‘பாரதமித்திரன்’, ‘காங்கிரஸ் பேரிகை’, ‘பாரதமணி’, ‘வீரசக்தி’, ‘சுதந்திரம்’ , ‘பொதுஜனம்’, ‘இந்துஸ்தான்’, ‘தமிழர் போதினி’, ‘இந்திய ஒளி’, பரலி சு. நெல்லையப்பரின் ‘லோகோபகாரி’, இராய. சொக்கலிங்கத்தின் ‘ஊழியன்’ எழுத்தாளர் வ.ரா.வின் வர்த்தகமித்திரன் ‘சத்திய வர்த்தமானி’ ‘சுதேசபூஷணி’, ‘வெற்றிக் கொடியோன்’ போன்ற பத்திரிகைகள் விடுதலைப் போர் காலத்தில் தோன்றி, வளர்ந்து, ஒளியுதறி இறுதியிலே மறைந்தன. அதனால், இவற்றின் ஒட்டு மொத்த உழைப்புகள், தேசத் தொண்டுகள், நாட்டுணர்ச்சி பணிகள், தியாக வரலாறுகள் அனைத்தும் தேசிய முரசுக் கொட்டுவனவாகவே இருந்தன.