பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

155



‘திராவிடன்’ பத்திரிகை ஆசிரியர் என்.வி. நடராசன் தன்னலம் மறுத்துக் கட்சி தொண்டாற்றிய பத்திரிகையாளராக வாழ்ந்து 3.8.1975-ல் மறைந்தார்.

சிங்கப்பூர் ‘தமிழ் முரசு’

கோ. சாரங்கபாணி

சிங்கப்பூர் தமிழர்கள் வெறும் மூட்டை சுமக்கும் பாட்டாளிகள் என்ற தாழ்நிலையைத் தூக்கி எறிந்து, அறிவு சுமக்கும் படிப்பாளிகள் என்ற உயர்நிலையையும் சிங்கப்பூர், மலேயா பகுதிகளில் உருவாக்கியவர் கோ. சாரங்கபாணி.

கடல் கடந்து சிங்கப்பூர் நகருக்குச் சென்று ‘முன்னேற்றம்’, ‘தமிழ் முரசு’ என்ற இரண்டு தமிழ்ப் பத்திரிகைகளை நடத்திப் பத்திரிகைத் துறையில் அழியாப் புகழ் பெற்றவர்.

தமிழ்நாட்டில் இந்தி மொழித் திணிப்பு முதன் முதலாக 1937-ஆம் ஆண்டில் நடைபெற்றபோது, அங்கு வாழ்ந்த தமிழ் மறவர்களுக்குத் தமிழருமையூட்டி, இந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொள்வதற்காகத் தமிழ் வீரர்களைக் கப்பலேற்றித் தமிழகம் அனுப்பி வைத்த தமிழ்நெஞ்சச் சான்றோராக சிங்கப்பூரில் வாழ்ந்த கொள்கைச் சிங்கம் அவர்.

‘தமிழவேள்’ என்ற விருது தமிழ் மக்களால் அவருக்குச் சிங்கப்பூரில் வழங்கப்பட்டது. அவருடைய ‘தமிழ் முரசு’ நாளேட்டில் தமிழக எழுத்தாளர்களை எழுத வைத்து, பத்திரிகையின் புகழை மலேயா நாட்டில் நிலை நிறுத்தியவர்.

கலைஞர் கருணாநிதி

‘முரசொலி’ நாளேடு

தஞ்சை மாவட்டம் திருக்குவளை என்ற சிற்றூரில் பிறந்த மு. கருணாநிதி அவர்கள், ‘சாம்போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும், என் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும்’ என்ற தமிழ் நெஞ்சச் சிங்கக் குருளையாக இளமையிலே இருந்தவர்.

அவர் ‘முரசொலி’ என்ற பெயரில், மாணவராக உள்ள போதே கையேட்டுப் பத்திரிகையாக நடத்தி, மாணவர்கள்