பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

185



டாக்டர் கிருஷ்ணசாமி இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். பாரிஸ்டர் டாக்டர் கிருஷ்ணசாமி தில்லி நாடாளுமன்றத்தில் நுழையும்போது ‘லிபரேட்டர்’ பத்திரிகை ஆசிரியர் என்ற செல்வாக்கோடு நுழைந்து அரும்பணிகள் பல புரிந்தார்.

டாக்டர் டி.எம். நாயர்

Justice

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன், கெட்டிஸ்பர்க் எனுமிடத்தில் பேசிய அரசியல் சொற்பொழிவு உலகப் புகழ் பெற்ற பேச்சாகும். அந்த மேதை அங்கே ஆற்றிய உரை உலக ஜனநாயக ஆட்சிக்கு மூலவித்தாக, மக்களுக்காக, மக்களால் மக்களுக்கு நடத்தப்படும் அரசாக ஓர் அரசு அமைய வேண்டும் என்ற மக்களாட்சி உரிமைகளை அங்கே முழக்க மிட்டார். அதனால் அந்தப் பேச்சு உலகப் புகழ் பெற்றது.

ஆபிரகாம் லிங்கனைப் போலவே, நீதிக் கட்சியைத் தோற்றுவித்தவர்களுள் ஒருவரான டி.எம். நாயர், 1917-ஆம் ஆண்டில், சென்னை சேத்துப்பட்டு கூவம் ஆறு ஒடும் பகுதியிலே இன்றும் இருக்கின்ற ஸ்பர்டேங் ரோட்டின் திடல்’ (Spurtank Road Speech) ஒன்றில் பேசினார். அந்த உரைக்கும் ஸ்பர்டேங் உரை (Spurtank Spech) என்று பெயர்.

அந்தக் கூட்டத்தில் டாக்டர் டி.எம். நாயர் பேசும்போது சுதந்திரம் (Liberty), சமத்துவம் (Equality) சகோதரத்துவம் (Fraterrity) என்ற முப்பெரும் அரசியல் தத்துவ விளக்கங்களை அப்பகுதியிலே வாழும் கல்விமான்களும், பாமரர்களும் கலந்து கொண்ட பெருங் கூட்டத்தில் விளக்கி அறிமுகப்படுத்தினார்.

டி.எம். நாயர் துவக்கிய இங்லீஷ் நாளேடான ஜஸ்டிஸ், நாயர் கூறிய கொள்கைகளைக் கடுகளவும் வழுவாமல், தனி மனிதர்களுக்கும், சமூகத்திற்கும் இடையே நடுநிலை தவறாமல், நீதியை நிலைநாட்ட, சமத்துவத்தை, சகோதரத் துவத்தை மக்கள் இடையே பரப்பிட அரும்பாடுபட்டது. அரசியல் உட்பகையால் ஜஸ்டிஸ் ஏடு பலம் சீரழிந்தது.