பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

244

பத்திரிக்கைகளைப் பாதுகாக்கும் ஃபெரோஸ் காந்தி சட்டம்!



பேசக் கூடாது. அல்லது வழக்கின் போக்குப் பற்றி தவறான கருத்துக்களைக் கூறக்கூடாது. இவ்வாறு ஒரு பத்திரிகை பகிரங்கமாக எழுதுமானால், அது நீதிமன்ற நிபந்தனைக் குற்றமாகும்.

தினந்தோறும் பத்திரிகையாளர்கள் அல்லது நிருபர்கள் காவல் நிலையத்திற்குச் சென்று, அங்கே என்னென்ன குற்றங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்பதை அறிய வேண்டும். அவற்றை எச்சரிக்கையோடு இதழ்களில் வெளியிட வேண்டும்.

‘கொலைகாரர் சங்கராச்சாரி’ கைது செய்யப்பட்டார்’ என்று நிருபர்கள் செய்திகளை வெளியிடக்கூடாது. ‘சங்கராச்சாரியைக் காவல்துறை கைது செய்தது காரணம் அவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டள்ளது” என்றுதான் செய்தியைப் பிரசுரிக்கவேண்டும்.

1952-ம் ஆண்டில் வெளிவந்த நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 32ம் பிரிவு (The Contempt of Court Act XXXII) நீதிமன்றங்களை அவமதித்தால் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது 2000 ரூபாய் அபராதம், அல்லது இரண்டையுமே விதிக்கலாம் என்று கூறுகின்றது.

நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. அதில் நீதிமன்ற நிபந்தனைகள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

1. நீதிமன்ற ஆணைகளுக்கு அல்லது தீர்ப்புகளுக்கு பத்திரிகைகள் அடங்காமல் அவமதிப்பது சமூகச் சிவில் Civil குற்றம்.

2. பத்திரிகைகள் செய்யும் நிந்தனைகள் குற்றவியல் கிரிமினல் Criminal அடிப்படையில் வரும் குற்றங்களாகும்.

எனவே, பத்திரிகையாளர்கள் எழுதும் கருத்துக்கள், நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்திற்குள் வராதவாறு எழுதப்பட வேண்டும் என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய எச்சரிக்கையாகும்.