பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

320

பொதுக் கூட்டச் செய்தியாளர் உரை சுவையில் மயங்கிவிடக் கூடாது!


கட்டுரைகளைச் சுவையோடு எழுதி மக்களால் விரும்பப்படும் எழுத்தாளர். அவர் எந்தக் கட்சியில் இருந்தாலும் தமிழில் மறுமலர்ச்சி சிந்தனையைப் புகுத்தியவர் என்பதால், எஸ்.எஸ். மாரிசாமி எழுதிய தமிழ்நடையை ஆராயும் குழுவில் அண்ணாதுரையை உறுப்பினராக நியமித்தேன்” என்றார்.

எந்தக் கட்சியிலே இருந்தாலும், அண்ணாதுரை ஒரு தமிழர் என்றாரே அவினாசிலிங்கம், அப்போது அவர் எண்ணியிருக்க வேண்டாமா ‘அண்ணாதுரை ஒரு வெள்ளைக்காரன் பூட்ஸ் நக்கி’ என்று?

காந்தியடிகளைக் கோட்சே சுட்டுக் கொன்றபோது, ‘எங்கே சென்னையில் இந்து-முஸ்லீம் கலவரம் வந்துவிடுமோ’ என்று அச்சப்பட்ட காங்கிரஸ் ஆட்சியாளர்கள், என்னை அகில இந்திய வானொலியிலே அழைத்து அமைதி காக்கப் பேச வைத்தார்களே, அப்போது எண்ணியிருக்க வேண்டாமா ‘அண்ணாதுரை ஒரு வெள்ளைக்காரன் பூட்ஸ் நக்கி’ என்று?

இந்தியா விடுதலைப் பெற்றவுடன் முதல் மத்திய அமைச்சரவையிலே நிதி மந்திரியாக இருந்த ஆர்.கே. சண்முகம் செட்டியார் யார்? காங்கிரஸ் போராட்டங்களிலே கலந்து கொண்டு சிறை சென்று மீண்டு தியாகத் தழும்புகளைப் பெற்றவரா? ஜஸ்டிஸ் கட்சியோடு சம்பந்தப்பட்ட சர்.ஆர்.கே.எஸ். வெள்ளைக்காரன் பூட்ஸ் நக்கி அல்லவா?

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதும் குழுவுக்கு தலைவர் யார்? காங்கிரஸ் கட்சியிலே வட மண்டலத் தலைவரா? தென் மண்டலத் தலைவரா? அவர்க்கும் காங்கிரசுக்கும் என்ன ஒட்டு உறவு?

இந்த அண்ணாதுரையாகிலும் வெள்ளைக்காரன் பூட்சை மட்டும் நக்கினான்! ஆனால், பூட்சையும், கழற்றிவிட்டு பாதங்களையே நக்கியவர்கள் யார்? காங்கிரஸ் தலைவர்கள் தான் என்பதைச் சிப்பியேந்திய சிவஞானம் மறந்து விட்டாரா? அறிவுப் பஞ்சம் உங்களுக்கு வரும்போதெல்லாம் உதவுபவர்கள் சர்.ஏ.இராமசாமி முதலியாரைப் போன்ற ஜஸ்டிஸ்