பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

384

பத்திரிகையாளர்களுக்கு திரு.வி.க. தமிழ்நடை அனுபவங்கள்!


நாட்டில் பலமுறை பிறவி தாங்கித் தொண்டு புரிவதில் விருப்பும் எனக்குள் நிகழ்கின்றன’’

‘தேசபக்தன் சுதந்திரத்தை விரும்புகிறான்; சுய ஆட்சி கேட்கிறான்; இந்தியாவிற்கும் - இங்கிலாந்திற்கும் சகோதரத்துவத்தை உண்டு பண்ணுகிறான். - ‘பக்தன்’ மாதவின் அடித் தொண்டன். அவன் பாரத நாட்டில் தோன்றிய ஒவ்வொருவருக்கும் உரியன்’ என்று 7.3.1918 இதழில் எழுதிய தலையங்கத்தில், பாரத நாட்டுக்குப் பத்திரிகையை அவர் காணிக்கையாக்கினார். தேசபக்தனில் தம் எழுத்துப் பற்றி, ‘யான் உருத்திரனானேன். என் எழுதுகோல் பாசுபதமாயிற்று’ என்று திரு.வி.க. விமர்சித்தார். பஞ்சாப் படுகொலை, சத்யாக்ரக இயக்கம் ஆகியவை நிகழ்ந்த வேளையில் ‘தேச பக்தன்’ நிலையம் காளி கட்டமாயிற்றென்றும்’ காளி, வீர நடம் உமிழும் சுவாலை எரிமலை போன்று விளங்கியதென்றும் அவர் நெஞ்சம் நிமிர்ந்து கூறினார். தேச பக்தனுக்கென்று ஒரு தனி நடை கொண்டேன். சிறு சிறு வாக்கியங்கள் அமைக்கலானேன்; என் நடை எங்கெங்கேயோ ஓடும்; திரியும்; அலையும்; பொருளுக்கேற்ற கோலந் தாங்கும்; இடத்துக்கேற்ற நடம் புரியும்” என்று தம் நடையை அவரே படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

அக்காலத்தில் பெயரளவில் தமிழில் வெளிவந்த போதிலும், தமிழ் உணர்வோ, மொழி வளமோ, நடைத் தெளிவோ குறையாய் வெளியிட்டு, கலங்கலும், கழிவும், கலப்பும் களங்கமும் நிறைந்த தமிழ் நடையில் தாக்கு பிடித்துக் கொண்டிருந்தன. பெரும்பான்மையான தமிழ்ப் பத்திரிகைகள்.

அந்நிலையை மாற்றி, தமிழ் ஆர்வத்தை ஊட்டி, தெள்ளு தமிழ் நடையில் மனத்தை அள்ளும் வகையில், பத்திரிகையில் எழுத இயலும் என்பதை நிலை நாட்டியவை, திரு.வி.க.வின் ‘தேச பக்தனும் நவசக்தி’யும். ‘அந்நாளில் நாட்டு மொழிப் பத்திரிகைகளில் அயல்மொழி நாற்றம் வீசும் ...... தேச பக்தன், பத்திரிகையுலகில் புரட்சி செய்தான். படிப்படியே செய்தான்.... தேசபக்தன் தமிழரை அன்னிய மோகத்தினின்றும் விடுவித்தான் என்று சொல்வது மிகையாகாது’ என்று பெருமிதம் கொண்டார் திரு.வி.க.