பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

உலக நாடுகளில் உருவான பத்திரிக்கை வளர்ச்சிகள்


களஞ்சியம்’ என்ற ஆண்டுக்கு ஒரு முறை வெளி வரும் ஆண்டு இதழைத் துவக்கினார்.

அந்தக் காலத்திலேயே அந்தக் களஞ்சியம் என்ற ஆண்டு இதழ் 10 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்று மக்களிடையே சாதனை புரிந்தது.

கவிதைத் துறை வளர்ச்சிக்காக தொண்டு செய்த ஓர் ஒப்பற்ற பத்திரிகை என்ற பெயரை நிலை நாட்டியதால், அது 1904-ஆம் ஆண்டுக்கான் நோபல் பரிசைப் பெற்றது.

ஆண்டுக்கு ஒருமுறை வெளிவந்த வருடப் பத்திரிகையில் அதுதான் முதல் பத்திரிகை. 1904ம் ஆண்டுக்காக அந்த இதழாசிரியர் பிரடெரிக் மில்ட்ரால் நோபல் பரிசைப் பெற்றார்.

இத்தாலி நாட்டின்
முதல் சிறுவர் பத்திரிகை

இத்தாலி நாட்டுப் பெருங் கவிஞர்களுள் ஒருவராக வாழ்ந்த கியாசு கார்டுக்கி என்பவர், ‘அப் பண்டிக்ஸ்’, Appendix என்ற பத்திரிகையில் இலக்கியப் பகுதி ஆசிரியராகப் பொறுப்பேற்றுப் பணி புரிந்தார். அவர் ‘ரைம்ஸ்’ என்ற மிகப் பெரிய கவிதைத் தொகுப்பை அந்தப் பத்திரிகையில் எழுதினார்.

அந்தக் கவிதைகளை எல்லாம் தொகுத்து ஒரு கவிதைப் புத்தகமாக 1857ம் ஆண்டில் கார்டுக்கி வெளியிட்டார். அந்தக் கவிதைகளின் அருமைக்காக 1906ம் ஆண்டில் அவர் நோபல் பரிசு பெற்றார். உலகில் முதன் முதல் நோபல் பரிசு பெற்ற சிறுவர் பத்திரிகை இதுதான்!

இந்தியாவில் பிறந்தவரால்
இங்கிலாந்துக்குப் பெருமை

ஆங்கில இலக்கிய உலகில் அணையா விளக்காக ஒளிவிட்ட ரூட்யார்டு கிப்ளிங், இந்தியாவில் இன்று மும்பை என்று அழைக்கப்படும் பம்பாய் மாநகரில் 30.12.1865ம் ஆண்டில் பிறந்தவர்.