பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

59


வடிவிலே எழுத முடியாமல் உரைநடை வாயிலாகவே எழுதினார்.

ஜார்ஜ் பெர்னாட்ஷா தனது அரிய இலக்கிய சேவைகளுக்காக 1925ம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற நாடக மேதையாக மக்கள் நெஞ்சில் நடமாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமையனும் - தம்பியும்;
ஜெர்மன் பத்திரிகையாளர்கள்!

ஜெர்மன் இலக்கிய சிற்பிகள் தாமஸ் மாண் ‘Thomas Mann’, அவரது உடன் பிறந்த சகோதரரான ஹென்றி மான் என்ற இருவரும் பத்திரிகைத் துறையிலே முறையாகப் பயிற்சி பெற்ற மேதைகளாவர்.

பத்திரிகைத் துறையில் தமையன் பெற்ற பெரும் புகழைத் தானும் பெற விரும்பிய தாமஸ் மாண் ‘சிம்ப்ளி சிசிம்ஸ்’ என்ற நகைச்சுவை வாரப் பத்திரிகையைத் துவக்கினார். அந்த ஏட்டில் அவர் சிறுகதைகளை எழுதி புகழ் பெற்றார். அதே நேரத்தில் இட்லர், முசோலினி போன்ற பாசிஸ்ட்டுகள் ஊழலை மிக வன்மையாகத் தனது பத்திரிகையில் கண்டித்து எழுதினார்.

1901-ஆம் ஆண்டில் தனது இதழில் தொடர்கதையாக எழுதி வந்த நாவலை நூலாக்கி, அதற்கு பட்டன்புரூக்ஸ் என்று பெயரிட்டார். இந்த நூலை எழுதியதால் அவரை ஜெர்மானிய இலக்கிய உலகின் விடிவெள்ளி என்று உலக அறிஞர்கள் பாராட்டினார்கள். 1929-ஆம் ஆண்டு தாமஸ் மாண் நோபல் பரிசைப் பெற்றார்.

அமெரிக்க பத்திரிகையின்
துணை ஆசிரியர் சிங்க்ளேர்

அமெரிக்காவிலே உள்ள மினிசோடா மாநிலத்தில் சாக் மையத்தில் 7.2.1885-ஆம் ஆண்டில் பிறந்தவர் சிங்க்ளேர் லெவிஸ். Sinclair Lweis. அவர் டென்னிசன், ஸ்வின்பர்ன் போன்றோர் கவிதைகளைப் பின்பற்றி எழுதுவதிலே வல்லவராக விளங்கினார்.