பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

உலக நாடுகளில் உருவான பத்திரிக்கை வளர்ச்சிகள்




பள்ளியிலும், கல்லூரியிலும் சிங்க்ளேர் படித்தபோது பத்திரிகைகளுக்கு கவிதைகளை கட்டுரைகளை எழுதி அனுப்புவார். அவை தொடர்ந்து வெளிவந்து அவரை உற்சாகப்படுத்தின.

‘ட்ரான்ஸ் அட்லாண்டிக் டேல்ஸ்’, “Trabs Atlantic Tales” என்ற பத்திரிகையில் சிங்க்ளேர் துணையாசிரியராகப் பணியாற்றினார். அந்த இதழில் அவர் எழுதிய ‘நமது திருவாளர் ரென்’ (cur Mr. Wrenn) என்ற தொடர் புத்தகமாக வெளி வந்து புகழ் பெற்றது.

அமெரிக்க இலக்கிய விமர்சகர்களும், குறிப்பாக பழங்கால இலக்கிய எழுத்தாளர்களான ஜேன் ஆஸ்டின், ஜார்ஜ் எலியட் ஆகியவர்களது திறமைகளை சிங்க்ளேர் வென்று விட்டார் என்று மக்கள் பாராட்டினார்கள். அமெரிக்க இலக்கிய வித்தகரான பெர்லி மில்லர், சிங்க்ளேர் இலக்கியத் திறமைகளை வெகுவாகப் பாராட்டி மகிழ்ந்தார்.

பொது வாழ்க்கையில் புகுந்து கொண்டு மக்களைப் பண மோசடி செய்கின்ற ஊழல்வாதிகளையும், பதவி வெறியர்களையும் சிங்க்ளேர் கடுமையாகக் கண்டித்த அவரது எழுத்துப் பாணி எப்படி இருந்தது தெரியுமா?

சிங்க்ளேர் பேனா மனதிலே குத்தும் கருவேலம் முள்ளைப் போல கடுகடுப்பான எரிச்சலையும், துள்ளி வரும் வேலாகவும், வீச்சரிவாளின் வேகத்தால் ரத்தம் கொட்டும் அழிவாகவும், அரசியலிலும், சமுதாயச் சீர்கேடுகளிலும் புகுந்து ஊழல்வாதிகளை அச்சுறுத்தியது எனலாம்.

சிங்க்ளேர் லெவிசின் இத்தகைய அற்புத எழுத்துத் திறமைகளால் அரசியலும், சமுதாயமும் சீரடைந்து வந்ததைக் கண்ட நோபல் நிறுவனம், அவரது சீர்திருத்தச் சேவைக்காகவும், இலக்கியத் திறன்களுக்காகவும், 1930-ஆம் ஆண்டில் நோபல் பரிசை வழங்கிப் பாராட்டியது.

ருஷ்ய பத்திரிகையாளர் இவான் பூனின்:

இவான்பூனின் என்ற ருஷ்ய எழுத்தாளர் 22.10.1870-ஆம் ஆண்டில் மத்திய ருஷ்யாவின் ஆரல் மாநிலத்தில்