பக்கம்:இதிகாசக் கதாவாசகம்-2.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பீமன் வல்லபம். 95 சொல்லித் தேறியிருந்தனர். சாதாரண ஜனங்கள யாவ ரும் இச்செய்தியை நம்பி வருந்திக் கொண்டிருந்தார்கள். வனத்திற் புகுந்த பீமன், தன் தாயை முதுகிற் சுமந்த படியே சகோதரர்களுடன் சண்டமாருதக்காற்றுப் போற் கடுகி நடந்தான். அவ்வேகத்தால் மாங்களும், செடி கொடி களும் சாய்ந்து விழுந்தன. பீமன் சென்ற விரைவிஞல் அவ ைேடு தொடர்து செல்ல முடியாமல் பாண்டவர்கட்கு மூர்ச்சை உண்டாகி விட்டது. சூரியனும் மேற்றிசைக் கட லுள் மூழ்கி விட்டான். அவ்வளவில் பீமன், வனத்திலுள்ள ஒர் ஆலமரத்தினடியில் தாயார், சகோதரர்களே அமரும்படி செய்து, அருகிலிருந்த பொய்கைக்குச் சென்று தாமரை இலைகளில் தண்ணீர் மொண்டு கொண்டு வந்தான். அதற் குள் மரத்தடியிலிருந்தவர்கள் வழிநடத்த அயர்ச்சியினுல் தரையில் படுத்து கித்திரை போயினர். பஞ்சணையில் படுத்து உறங்குதற்குரிய அவர்கள் தரையையே சயனமாகக் கொண்டு உறங்குவதைக்கண்ட பீமன், பலவாறு கவன்று புலம்பி அவர்களைக் கண்ணிமையாது பார்த்துக் காத்துக் கொண்டிருந்தான். இடிம்பன் வதம். இவ்வண்ணமாக இவர்கள் இங்கிருக்குங்கால் சமீபத் திலுள்ள ஒர் ஆச்சா மரத்தில் ஒர் அாக்கன் ஏறிக்கொண் டிருந்தான். அவன் மனிதர்களைக் கண்டால் ஒரே பிடியாய்ப் பிடித்துத் கரையில் புடைத்துத் தின்று விடுவான்; மிகுந்த பலமுள்ளவன்; காளமேகம் போல் இருண்ட கிறமுடைய வன்; செக்கர்வானம்போற் சிவந்த தலைமயிரையுடையவன். அவன் நடந்துவந்தால் அவன் வருமுன் அவன் கொத்தி