பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைச் செல்வம்

டின் கட்டிடக் கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இவற்றை எல்லாம் பார்த்த பின்தான் இன்று கட்டிடக் கலை எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கிறது என்பது தெரியும், சிமெண்டும். கர்டரும் கான்கிரீட்டும் வைத்து மொட்டை மொட்டையாய் கட்டடம் கட்டவே கற்றிருக்கிறார்கள் நமது கொத்தர்கள். பழைய பாணிகள் இவர்களுக்கு அழகாகப்படுவதில்லையோ, அல்லது கட்டும் திறமையை இழந்துவிட்டார்களோ அறியோம். கலை அழகோடு கூடிய பழைய பாணியையும் புதிய முறைகளையும் கலந்து கையாளத் தெரிந்தால் கட்டிடக் கலை வளரும். வளர வேண்டும் என்றே தமிழர்கள், தமிழ்க் கலைஞர்கள் விரும்புகிறார்கள்.

167