எஸ்.டி. சுந்தரம்
35
கொண்டது கோலமாய், சிற்றின்பச் சிட்டுக் குருவிகளாய், சிரித்து அழிக்கிறார்களே. இந்த அழியும் நாட்டுக்காகவா அவர்கள் சுதந்திரம் கேட்டார்கள்? புரட்சி செய்தார்கள்? இன்னுயிர் நீத்தார்கள்?
இந்த பிச்சைக்கார சுதந்திரத்திற்குத்தானா எண்ணில்லா மேதைகள் இறந்தொழிந்து பட்டார்கள்? இதற்காகவா பாரதி பரணி பாடினான்? இதற்காகவா தாகூர் தெய்வகீதம் இசைத்தான்? இந்த மட்டமான சமுதாயத்தைக் காணவா மகாத்மா முப்பது ஆண்டுகள் கடுந்தவம் கிடந்தார்?
இதற்காகவா அன்னை கஸ்தூரி தேவி சிறையிலே. பலியானார்?
இதற்காகவா தில்லையாடி வள்ளியம்மை உயிர் நீத்தாள்? - பால சுந்தரம் பரதவித்தான்?
இதற்காகவா பண்டித நேரு பதினான்கு ஆண்டுகள் தண்டனையடைந்தார்? இதற்காகவா ராஜன்பாபு சத்யா கிரகப் போர்க்களம் கண்டார்? இதற்காகவா சந்திரசேகர ஆஸாத் பறவையைப்போல் சுட்டுக் கொல்லப் பட்டான்?
சோம்பேறிகள் சுகம் பெறத்தானா எங்கள் சுபாஷ் பாபு சுதந்திர வேள்வியில் சுடர்விடும் ஜோதியானான்?
சதிகாரர்கள் ஜெயம் பெறத்தானா சுப்பிரமண்ய சிவா உடல் அழுகிச் செத்தான்? விடுதலைக் கீதமிசைத்தான்? வாஞ்சிநாதன் வெஞ்சமர் புரிந்தான்?
பாவிகள் பிழைக்கத்தானா. பாலகன் பாபுகானின் தலை சூறைத் தேங்காய்ப் போல் வெடித்துச் சிதறியது?
அயோக்கியர்கள். சுகம் பெறத்தானா அஜய்கோஷ் அவதிப்பட்டான்? இதற்காகவா காட்டே, டாங்கே, சக்கரைச் செட்டியார், திரு.வி.க., வாடியா போன்றவர்கள் தொழிற்சங்க வரலாற்றினைத் துவக்கி வைத்தனர்?
இதற்காகவா சர்தார் பட்டேல் பர்டோலியை குருக்ஷேத்ரமாக்கினார்?