பக்கம்:இந்தியா எங்கே.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

இந்தியா எங்கே?


இதற்காகவா ஆஸாத் ஆருயிர் நீத்தார்?

நோய் வந்து ரத்தம் கக்கிய போதும், முதுகெலும்பின் மூட்டு முறிந்த போதும், இந்திய சுதந்திரத்திற்காகவே கடைசிவரை கர்ஜனை செய்தானே நாவலன், சொல்லின் செல்வன் சத்திய மூர்த்தி. இதற்காகவா சாகும் வரை சண்டை போட்டான்?

இதற்காகவா ஜீவானந்தம்

ஜீவன்போகும் வரை பாடுபட்டார்? இதற்காகவா முத்துராமலிங்கத்தேவர்

- தியாகக்கனல் மூட்டினார்? இதற்காகவா வரதராஜுலு நாயுடு

பெரியார் - ராஜாஜி - காமராஜ் திரு.வி.க போன்ற பெரியவர்கள்

சொல்லரிய வேதனைகளை அனுபவித்தனர்? இன்னும் எத்தனை எத்தனை ஏழைத்தோழர்கள்

பெயர் தெரியாத கண்மணிகள் உயிர் வெறுத்து மறைந்தது

இந்த சுதந்திரத்திற்காகத்தானா? இந்தக் கொடுமையை நாம் காண்பதற்காகவா கோடானு கோடி மக்களைப் பலி கொடுத்தோம்? குடும்பங் களை இழந்தோம்? பந்தபாசங்களைத் துறந்தோம்? ஏமாளிகள் ஆனோம்?

இதற்காகவா மகாத்மா காட்டிய வழியிலே மகத்தான தியாகங்களையெல்லாம் செய்தோம்?

இதற்காகவா சத்தியச் சமர் புரிந்தோம்? இதற்காகவா கூலிப் போலீஸ்காரன் கொடுத்த தடி, அடி, உதைகளை யெல்லாம் சகித்துக் கொண்டோம்? போரிலே பட்டெரிந்த பச்சை மரங்கள் எத்தனை? எப்படி எண்ணுவது? எவர் எண்ணிப் பார்க்கிறார்கள்?

இதற்காகவா பஞ்சாப் படுகொலை? இதற்காகவா வங்காளப் பஞ்சம்? இதற்காகவா நவகாளியாத்திரை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/38&oldid=1401730" இலிருந்து மீள்விக்கப்பட்டது