பக்கம்:இந்தியா எங்கே.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 இந்தியா எங்கே?

பெறும் சோலைவனத்தின் முன்னணியில் நின்று “எங்கள் வாழ்வும் வளமும் எங்கே? வறுமைக்கு பார்த்துக் கேட்கிறது. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லாத உங்கள் ஜனநாயகம் எதற்கு வேண்டும்; சுதந்திரம் யாருக்கு வேண்டும்? என்ற கேள்விக்குறி விஸ்வரூபம் எடுக்கிறது.

இளமைக் கேள்விகள் இருக்கும் துடிப்பைக் கண்டு நாம் அஞ்சலாமே தவிர, அந்தக் கேள்வியில் வஞ்சகம் இருப்பதாகத் தெரியவில்லை. பதில் சொல்ல முடியாமல் அஞ்சிப் பதுங்கும் இந்த நாட்டு செக்குமாட்டு அரசியலில் தூய்மை இருப்பதாக இளமையின் எழுச்சி நம்ப மறுக்கிறது.

காலத்தின் கேள்வி?

இது இளமையின் கேள்வி மாத்திரமல்ல; காலத்தின் கேள்வியுமாகும். இதற்கு விடை கூறாமல் காலத்தை நாம் கடத்தினால் வெகு விரைவில் காலம் நம்மைக் கடத்திக் கொண்டு போய்விடும். சத்தியமே ஜெயிக்கும், வாய்மையே வெல்லும் என்று எழுதி வைத்திருக்கிறீர்களே, அதைச் செயலாக்காதது ஏன் என்று கேட்கிறான் சின்னத் தம்பி!

அதோ, மீண்டும் கேட்கிறது சுதந்திரம் யாருக்கு? என்ற வினா. பதில் சொல்ல நாம் பயப்படுகிறோம்! நீங்கள் அஞ்சுகிறீர்கள். உங்கள் அரசியல் குழப்பமடைகிறது. நமது கொள்கை, குருக்ஷேத்திரத்து அர்ஜுனன் போல் தலை குனிந்து கிடக்கிறது. ஆனால், துணிச்சலை இழந்துவிட்ட நமக்கெல்லாம் துணிச்சலைக் கொடுக்கும், ஒரு தூய்மையான குரல், நமக்கெல்லாம் கேள்விக்கேற்ற பதிலைச் சொல்லு கிறது.

இந்நாட்டு மைந்தர்கள் பாசத்தோடு கேட்கும் கேள்வி களுக்கு, தேசத்தின் தந்தை பதில் சொல்கிறார். நம்மைபோல் அஞ்சி ஓடிடும் கோழையல்ல அவர் அவர் வீரர்க்கெல்லாம் పికి, வீரர் எண்பதாவது ஆண்டில், தன்னை நோக்கி

سه و 6T.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/52&oldid=537612" இலிருந்து மீள்விக்கப்பட்டது