92
வான்
வேல்
வான்
வேல்
வான்
நம் தாய்
(ஒரு கல்மீது அமர்கிறாள்)
- அருகமர்த்ததும், அவள் அணிந்திருந்த நகை
களைப் பார்த்து வியந்து வேல்விழி! இதென்ன இது இந்த நகைகளை எங்கு திருடினாய்? எப்படிக் கண்டுபிடித்தாய்? யாரும் அறியாத இடத்திலல்லவா புதைத்திருந்தேன். உண்மை. வேறு யாரும் நம் இரகசியத்தை அறிய முடியாதுதான். நானறியாத இரகசியம் தங்கள் மனக்குகையிலேயே இல்லாதபோது, இந்த மலைக் குகையில்தானா இருக்கப் போகிறது. வேல்விழி! இந்த விஷ நாகங்களை உடனே கழற்றி எறி. ஞானஜோதியான உன் மேனியில் இந்த நாற்றக் கற்கள் இடம்பெற யோக்கியதை அற்றவை என்ன பேசாதிருக்கிறாய்?
(ஆத்திரத்தோடு அந்த ரத்ன ஆபரணங்களை
எல்லாம் கழற்றி வீசுகிறான்) ஏன் இப்படிக் கோபம்? விலை மதிக்க முடியாத
மாணிக்கங்கள். ரத்ன மணிகள். மாற்றறியாத பசும்பொன் அணிகள். வீசுவது அபசகுனமென் பார்களே! இவைகள் ஏது?
. மாற்றறியாத பசும்பொன்னா இது! -થઈ எனது
நாட்டின் மாற்றறியாத மனித மாணிக்கங்களை எல்லாம் மிருகங்களாக மாற்றிச் சந்தையில் ஏலங்கூறி விற்ற மாபாதகனுக்குக் கூலியென்ற பெயரால் அளிக்கப் பட்ட பழி விலங்குகள். (சிரிப்பு ரத்னங்களா இவை? அல்ல; என்னரு மைச் சோதரிகளின் வற்றிய உடற்கூடுகளை ஆதிபத்யக் கசைகள் பின்னியிழுக்கும்போது வெளித் தோன்றி உறைந்துபோன இரத்தத் துளிகள் இவை. பச்சைக்கற்களா இவை? அல்ல. வஞ்சகமறியாத பல்லாயிரக்கணக்கான வளிய ஜீவன்கள், பனித் தீவிலே தரப்படும் பொறுக்க