பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை

இம்முறை, படிப் போருள்ளத்திற் பாடற்பொருளை நன்கு பதியும்படி செய்யும்!”

எனப் புறநானூற்று உரைநூல் அணிந்துரையில் அ. சிதம்பரநாதச் செட்டியார், உரைவேந்தரின் உரைத்திறம் பற்றிக் குறிப்பிடுவர். இதற்கு ஒரு சான்று:

புறநானூற்றில் வரும், ‘நுங்கோ யாரென வினவின்’(212) எனும் பாடல், கோப்பெருஞ்சோழனைப் பிசிராந்தையார் பாடியது. இதன் முன்னுரையில்,இப்பாடல் தோன்றிய சூழலைச் சுருக்கமாக இனிதெடுத்து மொழிகின்றார் உரைவேந்தர்:

“பிசிராந்தையார், பாண்டி நாட்டுப் ‘பிசிர்’ என்னும் ஊரில், இருந்து வருகையில்,கோப்பெருஞ் சோழனுடைய அறிவு நலமும் ஆட்சி நலமும் கேள்வியுற்று, அவன்பாற் பெருங் காதல் கொண் டொழுகினார். பாண்டிநாட்டிலிருந்தது அவருடல் எனினும், அவரது உயிர், உறையூரிலிருந்த கோப் பெருஞ்சோழனையே சூழ்ந்து கொண்டிருந்தது. ‘பிசிர்’ இப்போது ‘பிசிர்குடி’ என வழங்குகிறது. அவரது நினைவு முற்றும் சோழன்பால் ஒன்றி யிருந்தமையின், யாவரேனும் நும்முடைய வேந்தன் யாவன்?’ என்று கேட்பின், 'எம் வேந்தன் கோப் பெருஞ்சோழன். அவன் உறையூரில், ‘பொத்தியார்’ என்னும் புலவர் பெருந்தகையுடன் இனிதிருக் கின்றான்' என்று கூறுவர். இவ்வாறு பன்முறையும் கூறிப் பயின்ற அக்கூற்று, இப் பாட்டாய் உருக்கொண்டு நிற்கின்றது!”

-இதனைப் படித்த மாத்திரத்திலேயே இப்பாடலை அறிய வேண்டும் எனும் அவா தோன்றுமன்றே!

பாடற்கருத்தை வரன்முறைப்படுத்தித் தெளிவுறுத்தல்

“தொலி(தோல்) நீக்கியபின், பழத்தைச் சுளை சுளையாகப் பிரித்துண்டு மகிழ்வது போலப்