98
உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை
புறுவாய்!’ என்றேன். அந்தச் சிறுவன் யார் என்று நினைக்கின்றீர்கள்? இன்று தமிழ்நாடு சட்ட மன்றச் சபாநாயகராக இருந்து, நிகழும் வாதங்களுக்குத் தீர்ப்புக் கூறும் வகையில் நாடுபுகழும் நலம் பெற்ற மாண்புமிகு புலவர் கோவிந்தனாராவர்!”
இதனைக் கேட்ட தமிழ்ப் புலவர் குழாம், கையொலி எழுப்பி ஆரவார மகிழ்ச்சியில் திளைத்தது
கையாளும் ‘நடை’ (Style)
உரைவேந்தரின் எழுத்திலும் பேச்சிலும் நல்ல ‘தமிழ் நடை’யைக் காணலாம். சின்னஞ்சிறு தொடர்களும் உண்டு; நீண்ட தொடர்களும் உண்டு. எதுவாயினும் ‘கொஞ்சுதமிழ் நடை’ தான்!
“அவர் வரிசையுடையோர்; அவர்க்கு உலகம்
பெரிது; அவரைப் பேணுவோரும் பலர்!”
“வேந்தன் சினத்தினன்; தந்தை செய்யான்; களிறு
சேரா மறவர் வாய் மூழ்த்தனர்; ஊர்பேதுற்
றன்று;தாய் அறனிலள்”
“அவர்கட்குப்(புலவர்) போர்க்களமும் ஒன்றே; ஏர்க்
களமும் ஒன்றே; செல்வக் காலமும் அல்லாக்
காலமும் எல்லாக் காலமும் ஒன்றுதான்!”
“இறந்தது நினைந்து, இனி இரங்குவதை
விடுத்து, இந்நூற்கண் செல்வாம்!”
“கொடையினும் ஒருவனே கொடுப்பன்:படையிலும்
ஒருவனே கெடுப்பன்!