இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
திருவஞ்சைக்களம் நம்பியாரூரர் திருவஞ்சைக்களம் சென்று இறைவனைப் பாடி இனி இவ்வுலகில் வாழ விரும்பவில்லை என்று வேண்டிக் கொண்டார். உடனே கயிலையிலிருந்து நான்முகன், தேவர்கள் முதலியோர் இறைவன் ஆணையின் வண்ணம் வெள்ளையானை ஒன்று கொண்டுவந்து அதன்மேல் நம்பியாரூரை ஏற்றிக் கொண்டு கயிலை சென்றனர். கயிலை செல்லும் வழியில் நம்பியாரூரர் பாடிய பாடல்கள் இவை: (திருவஞ்சைக்களம் i D oči) ol) ILI IT ST நாட்டில் கொல்லத்தை அடுத்துள்ளது)