பக்கம்:இன்னமுதம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ் ITரைப்பற்றிப் பாடப்படுகின்றதோ அவர்களைக் குழந்தையாகக் கருதிக் கொண்டு, அக்குழந்தை செய்த, செய்யக்கூடிய செயல்களை எல்லாம் கற்பனை செய்து பாடுவதே பிள்ளைத்தமிழ் எனப்படும். காப்புப் பருவம் முதல் பத்துப் பருவங்களை உடையது இது. ஆண்பாற் பிள்ளைத் தமிழ் என்றும், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என்றும் இருவகைப்படும். கடைசி மூன்று பருவங்கள் மட்டுமே இரண்டிலும் மாறுபடும். திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் என்ற நூல் பகழிக்கூத்தர் என்பவரால் இயற்றப்பெற்றது இங்குள்ள பாடல் "சிற்றில் பருவம்” எனக் கூறப்பெறும் பருவத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/72&oldid=747078" இலிருந்து மீள்விக்கப்பட்டது