உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

இன்ப

கார்: ஆமாம்! பொடி கிடைத்த மகிழ்ச்சியில் மட்டுமல்ல, அவசரத்தையும் முன்னிட்டு அப்படியே எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன்.

[என்றதும், அருகில் நின்ற ஒரு வீரனை அழைத்து]

தள: வேட்டை நாய் ஒன்றை இழுத்துவா!

[என்றதும் வீரன் ஓடிப்போய், நாய் ஒன்றை இழுத்து வருகிறான். கார்மேகம் பெட்டியைத் திறந்து, அதற்குள்ளிருந்த கண்ணாடிக் கரண்டியொன்றையும் எடுத்துக் கொடுத்துவிட்டு, மூட்டையைப் பிரிக்கிறார். தளபதி மூட்டையிலிருந்த பொடியில் கொஞ்சம் எடுத்து, நாயின்மேல் அங்குமிங்குமாகத் தெளிக்கிறார். அதற்குள் கார்மேகம் சற்றுத் தூர விலகி நிற்கிறார்! நாய் வாலைக் குழைத்து தளபதியின் காலை நக்கிக் கொடுக்கிறது. சில வினாடிகள் கழித்த பிறகும் புண்கள் ஏற்படாததைக் கண்டு]

தள: கார்மேகம்!

[என்று ஆத்திரத்துடன் கர்ஜிக்கிறான்! கார்மேகம் அருகில் வருகிறார்.]

இதென்ன மோசம்! இதென்ன துரோகம்!

[என்று உறுமுகிறான்.]

கார்: ஆச்சரியமாயிருக்கிறதே தளபதியாரே! ஏமாந்து விட்டேன்; ஏமாற்றப்பட்டு விட்டேன்...

[என்று பதறுகிறார். தளபதியின் கண்கள் சிவக்கின்றன...]

தள: ஏமாறவில்லை கார்மேகம்! ஏமாற்றுகிறீர்! மல்ல நாட்டுக்குத் துரோகம் இழைத்து விட்டீர்!

கார்: இல்லை தளபதியாரே, நான்...