உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

இன்ப

குணா: உன் முடிவு அதுவானால், என்னால் தடுக்க முடியாது மணிவண்ணா!

திரு: அண்ணா, என் வாழ்வைப் பலியிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்! உங்களது இலட்சியப் போராட்டத்துக்கிடையே, என் வாழ்வுப் போராட்டமும் இணைந்திருக்கிறது என்பதை இருவருமே மறந்து விட்டீர்கள்.

மணி: இல்லை திருமதி! ஒருத்திக்கு ஒருவன் என்ற தத்துவம், ஒருவனுக்கு ஒருத்தி என்று இருக்க வேண்டுமென்பது என் கருத்து. என் இதயத்தில் இன்னொருத்திக்கு இடம் இல்லை. இலட்சியப் பலி என் எதிரே நடைபெறவேண்டாம் என்றுதான் போகிறேன்! வெறும் பிரமை என்பதும் எனக்குத் தெரிகிறது—மனச் சாந்திக்காக, என்னையே நான் ஏமாற்றிக் கொள்வதற்காகப் போகிறேன்!

[என்று கூறிவிட்டுப் போய் விடுகிறான். குணாளன் படுக்கையில் போய் விழுகிறான். திருமதி தேம்பிக் கொண்டு நிற்கிறாள், படுக்கையில் கிடந்தபடியே.]

குணா: திருமதி! தேம்பிப் பயனில்லை. திருநாடு முதவில் எதிரியிடமிருந்து மீட்கப்பட வேண்டும். போ! சிறைச்சாலைக்குப் போய், நீயே அப்பாவிடம் கேட்டுப் பார்! நானும் விக்ரமனுக்கு உதவி செய்யத்தான் வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருப்பதாகக் கூறு. செய்யப்படும் உதவி, விக்ரமனுக்காக அல்ல—திருநாட்டுக்காக என்று எடுத்துக்காட்டு! போ, திருமதி ! விரைவாகப் போய் வா!

[என்றதும் திருமதி தயக்கத்துடன் புறப்படுகிறாள்.]

சிறைக்கூடத்தை நோக்கி, தடுமாற்றத்துடன் எழுந்து இரகசியக் குறிப்பேடு இருக்குமிடத்துக்கு வருகிறான் குணாளன். அதனைக் காணாமல் திடுக்கிட்டுப்போய், அங்குமிங்கும் தேடுகிறான். கிடைக்கவில்லை; கவலை முகத்தில் கப்பிக் கொள்கிறது.