உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

33

காட்சி—9

[வீதியில் வீரன் ஒருவன் தண்டோரா போட்டுக் கொண்டு போகிறான். பலபேர் நின்று அதனைக் கவனிக்கின்றனர்]

"இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், திருநாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக அரசர், புதிய சில திட்டங்களை மேற்கொள்ள விருக்கிறார். புதிய திட்டத்தின் மூலம் புதுவாழ்வு பெறப்போகிறார்கள் மக்கள். புது வாழ்வு அளிப்பதற்காக, திருநாட்டுத் தேவாலயங்களையும், இனிமேல் அரசாங்கமே நேரடியாக நிர்வாகிக்கப் போகிறது. அரசாங்க நிர்வாகத்தின்கீழ், ஆலயங்களின் பூஜை, புனஸ்காரங்கள் அனைத்தும் எப்போதும்போல் நடைபெற்றுக் கொண்டேவரும். இதன்மூலம், தனிப்பட்டவர்களிடம் ஆலயத்தின் சொத்துக்கள் இருப்பது இன்றுமுதல் பறிமுதல் செய்யப்படுகிறது. இது மன்னர் குமாரவேலரின் உத்தரவு.."

[படித்துவிட்டுப் போய்விடுகிறான் வீரன். மக்களில் சிலர்...]

ஒருவன்: கோயில் சொத்துக்களைக் கொள்ளையடித்துக் கொண்டிருந்தவன்களுக்கு வந்துட்டுது ஆபத்து!

இரண்டாமவன்: பின்னென்ன! ஆண்டவனுக்கு ஆயிரம் காணி எதுக்கு? ஆறுகால பூசைக்கு 5லட்சம் 50லட்சம்ன்னா, அடுக்குமா? ஆண்டவன் அப்படிக் கேட்கிறாரா? உள்ளன்போடு பக்தி செலுத்தினா போதாதா?

மூன்றாமவன்: இதெல்லாம் ஒரு சம்பிரதாயந்தானே! அந்தந்த காலத்துக்குத் தக்கபடி ஏதோ ஒரு ஏற்பாடு செய்து வச்சிருந்தாங்க! இது விக்ரமன் காலம்! விபரீத புத்தி!

வேறொருவன்: விபரீதமும் இல்லே, விளையாட்டும் இல்லே, திருமுடியார் இருக்காரே, அவருடைய ஆதிக்கத்திலே மட்டும் ஐயாயிரம் ஏகரா புஞ்சை இருக்கு. அவரது அதிகாரத்திலே இருக்கிற எல்லா கோயில்களுக்கும். ஐம்பதாயிரம்

பூ-160-இ-2