உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன முழக்கம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 (கோட்புலி நாயனார் குறுக்கிட்டு) தாயாரா?' உமது "ஆமாம், என் தாய்! என்னைப் பத்துமாதம் சுமந்து பெற்றதாய். அழகுத் தொட்டிலில் இட்டு ஆராரோ பாடிய தாய்! இந்தத் தாயாரை நான் என் தாரமாகக் கொண்டிருக்கிறேன். இங்கு மட்டுமல்ல, பூலோகத்திலேயே இந்த அன்னை என் ஆசை நயாகியாக இருந்தாள். இவள் என் னைத் தொட்டிலில் போட்டு ஆட்டினாள். நான் இவளுக்குக் கட்டிலில் இன்ப மூட்டினேன், மனைவியாக்குவது மகா பாப மாதாவை மல்லவா என்பீர்கள்; இதைவிட மகா மகா பாப மாக, எங்களை மஞ்சத்தில் கண்டுவிட்ட என் தகப்பனாரை உடனே கொன்று போட்டேன். உனக்கா சொர்க்கவாசல் திறந்தது என்று கேட் கிறீர்களா? ஆமாம்; எனக்குத்தான் சொர்க்கம் சுலபத்தில் வழிவிட்டது. 'அரகர மகாதேவா என்றேன்; அம்மையை அணைத்தபடி அப்பன், ரிடபவாகன ரூடராய் அருள்மழை பொழிந்தார். ஆனந்தமாக சொர்க்க பூமிக்கு வந்துவிட்டேன். . 9 99

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன_முழக்கம்.pdf/21&oldid=1701736" இலிருந்து மீள்விக்கப்பட்டது