பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

சுந்தர சண்முகனார்



இக்கருத்து ஒருவகையில் நடைமுறைக்கு மாறாகத் தெரிகிறதல்லவா? அங்ஙனமாயின்; இக்கருத்து பொருந்துமாறு எங்ஙனம் என ஆராயவேண்டும்,

வரலாறு நடந்ததைக் கூறுவது; இலக்கியமோ நடந்ததை நடப்பதை அடிப்படையாகக் கொண்டு இனி நடக்க வேண்டியதைக் கூறுவது என்பது. “இலக்கியமும் வரலாறும்” என்பது தொடர்பான ஒரு கருத்தாகும்.

கருதுகோள்

திருக்குறள் ஓர் இலக்கியம். “நடந்ததை அடிப்படையாகக் கொண்டு நடக்க வேண்டியதைக் கூறுவது இலக்கியம்” என்ற கருதுகோளை (Formula) மேற்காட்டியுள்ள குறளோடு பொருத்திப் பார்க்குங்கால் அறியப்படும் உண்மையாவது:

பிறர்க்கு வழங்குபவரிடத்திலேயே செல்வம் இருக்கும் என்பது, வள்ளுவர் வெளிப்படையாகக் கூறியுள்ள கருத்து. இத்ற்குள்ளே மறைந்து பொதிந்து கிடக்கும் கருத்து ஒன்று உண்டு: காக்கையைப் போல் பரந்த உளப்பாங்கு உடையவரிடத்திலேயே - பலர்க்கும் பயன்படுபவரிடத்திலேயே செல்வம் இருக்க அரசு ஒப்புதல் அளிக்க (அனுமதிக்க) வேண்டும்: அவ்வாறு பயன்படாதவர் செல்வத்தைப் பறிமுதல் செய்யவேண்டும் என்பது அதன் உட்கருத்து. இஃது, அரசு மேற்கொள்ள வேண்டிய கட்டளைக் கருத்தாகும். “நடந்ததை-நடப்பதை அடிப்படையாகக் - கொண்டு நடக்க வேண்டியதைக் கூறுவது இலக்கியம்” என்ற கருதுகோளின்படி, மேற்காட்டியுள்ள குறளின் பொருத்தப்பாடு இப்போது புலனாகலாம்.

ஆக்கம் யாரிடத்தில் நிலைபெற்றிருக்க வேண்டும் என்பதைக் காக்கை கற்பிக்கின்றதல்லவா?