பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

சுந்தர சண்முகனார்



தமிழில் “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்” (164) என்னும் நன்னுால் விதிப்படி, விளக்கு + எரிந்தது என இரண்டு உயிர்கள் இணையின் ஓருயிர் கெடும். இங்கே ‘கு’ என்பதில் உள்ள ‘உ’ போக, ‘க்’ என்பதில் ‘எ’ சேர விளக்கெரிந்தது என்பது உருவாயிற்று. ஆங்கிலத்தில், No one என்பதில் ஓர் ‘O’ கெட none என்பதும், No + ever என்பதில் உயிர் O கெட never என்பதும் உருவானமை காண்க. I have என்னும் பொருள் உடைய Je + ai என்னும் பிரெஞ்சு தொடரில், ‘சு’ என்னும் உயிர் கெட, ‘J’ ai என்பது உருவானமையும் காண்க.

‘உயிர்வரின் உடம்படு மெய்யென்றாகும்’ (162) என்னும் நன்னூல் விதிப்படி, மணி + அடித்தான் என்பதில் உள்ள இ + அ என்னும் இரண்டு உயிர்களை இணைக்க ‘ய்’ என்னும் உடம்படுமெய் (ஒன்று சேர்க்கும் மெய்) வர, மணியடித்தான் என்பது உருவாயிற்று. இதேபோல் ஆங்கிலத்தில் a + egg என்பதை இணைக்க, இடையே N என்னும் உடம்படு மெய்வர an egg என்பது உருவானமையும் காண்க.

குறிப்பிட்ட ஓர் இலக்கை அடைவதற்காக இவ்வளவு பயணம் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. காலொடிந்தது என்பதிலே, ஒலிப்பு முயற்சி ‘கா’ என முதலில் நீண்டு செலவிடப்பட்டதால், அங்கே ஒன்று இரட்டிக்கவில்லை. கல்லுடைந்தது என்பதிலே, ஒலிப்பு முயற்சி முதலில் அழுத்தம் பெறாமல் அடுத்து அழுத்தம் பெற்றதால் அங்கே ஒன்று இரட்டித்தது. இதுதான் இயற்கையான புணர்ச்சி விதிமுறையாகும்.

பண்புப் புணர்ச்சி

உண்மை - இவ்வாறிருக்க, நன்னூலார் பண்புத் தொகைப் புணர்ச்சியில் தவறிவிட்டார். செம்மை +