பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் தமிழ் இன்பம்

195


“அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய
தன்னுறு பெடையைத் தாமரை அடக்கப்
பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடைகொண்டு-ஏற”

என்னும் பாடல் பகுதியால் அறியலாம். ஈண்டு, தன்னுறு பெடை, அடக்க, பொதி சிதையக் கிழித்து-என்னும் சொல்லாட்சிகள் குறிப்பிடத்தக்கன.

சேவலுக்கு நீர் என்றாலே அச்சம் (அலர்ஜி) ஏற்பட்டு விட்டது. தண்ணீரினின்றும் நீண்ட இடைவெளி உள்ள ஓர் இடத்தில் தங்க வேண்டும் என எண்ணியது. கரையில் உள்ள ஒரு செடியில் தங்கலாமா? செடி உயரம் இல்லை. தண்ணீருக்கும் செடிக்கும் இடைவெளி குறைவு. அதனால் ஒரு மரத்தில் தங்க எண்ணியது. மரம் என்றால் உயர்ந்த மரமாயிருக்க வேண்டுமே! எனவே, அங்கிருந்த மர வகைகளில் உயர்ந்ததான தென்னையில் தங்க எண்ணியது. இருந்த தென்னை மரங்கட்குள்ளும் உயர்ந்த - மிக உயர்ந்த தென்னை மரத்தைத் தேர்ந்தெடுத்தது - அந்த மிக உயர்ந்த தென்னையிலும் எவ்விடத்தில் அமரலாம்? ஏதாவது ஒரு மடலில் (மட்டையில்) தானே அமர வேண்டும்! எந்த மடலில் அமரலாம்? நாள்பட்டதால் கீழ் நோக்கித் தொங்கும் மடல்களில் அமரப் பிடிக்கவில்லை. பக்க வாட்டத்தில் நீட்டிக் கொண்டிருக்கும் நடுத்தர மடல்களிலும் தங்க விருப்பம் இல்லை. மேல்நோக்கிச் செங்குத்தாக உயர்ந்து நீண்டு கொண்டிருக்கும் மடலிலே தங்க விரும்பியது. ஏனெனில், அந்த மடல், விநாடிக்கு விநாடி உயர்ந்து கொண்டே இருந்ததாம். (இந்தக் கருத்தைச் செகதீச சந்திரபோசின் ஆராய்ச்சியாலும் அறியலாம்). எனவே, அந்த மடலிலேயே தங்க எண்ணியது. இதனை, அந்தப் பாடல் பகுதியைத் தொடர்ந்துள்ள

“ஓங்கு இரும் தெங்கின் உயர்மடல் ஏற” (126)