பக்கம்:இயல் தமிழ் இன்பம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

சுந்தர சண்முகனார்


“...மகிடற் செற்றாள் கொற்றவை சக்கிரபாணி...
மேதிச் சென்னிமேல் இடர்உற மிதித்த மெல்லியல்
சூலி சண்டிகையே கன்னி சுந்தரி துர்க்கை நாமம்”-

இந்த இரண்டு நிகண்டுகளிலும் கொற்றவை, துர்க்கை என்னும் பெயர்கள் உள்ளன; சூலம் உடையவள் என்னும் பொருளில் சூலி என்னும் பெயர் உள்ளது; மகிடாசுரனைக் கொன்றவள் என்னும் பொருளில் மகிடன் காய்ந்தாள், மகிடன் செற்றாள் என்னும் பெயர்கள் உள்ளன. கொற்றவைக்குச் சிங்க ஊர்தி உண்டெனினும், எருமைத் தலை அசுரன் என்னும் பொருளுடைய மகிடாசுரனை அழித்ததும் அவன் அவன் தலைமேல் அமர்ந்தாளாம். மகிடம், மேதி என்பவற்றின் பொருள் எருமை. இதைத் தான், ‘மேதித் தலைமிசை விசயை’ எனவும், ‘மேதிச் சென்னிமேல் இடர் உற மிதித்த மெல்லியல்’ எனவும் நிகண்டுகள் குறிப்பிட்டுள்ளன.

இதைத்தான் இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் வழக் குரை காதையில்,

“அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப்
பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி
வெற்றிவேல் தடக்கைக் கொற்றவை” -

(34, 35, 36)

என்று குறிப்பிட்டுள்ளார். துணிக்கப்பட்ட - பச்சைக் குருதி (இரத்தம்) அடங்காமல் ஒழுகுகின்ற பிடரித்தலையாகிய இருக்கையில் அமர்ந்து கையில் வேலேந்திக்கொண்டுளள் கொற்றவை - என்பது இந்தப்பாடல் பகுதியின் கருத்தாகும்.

துர்க்கையைப் பற்றி மார்க்கண்டேய புராணம் முதலிய நூல்கள் பல கதைகளைக் கட்டியுரைத்துள்ளன. துர்க்கைக்கு நூறு கைகளாம் - ஒவ்வொரு கையிலும் படைக்கலம் (ஆயுதம்) இருக்குமாம் மற்றும் சில: