பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

109


இன்னதொன்றும் அங்குள்ள தமிழர்களுக்குச் சொல்ல வேண்டுமாம்.

தமிழின் பெருமையை மற்றவர்கள் அறிய முடியாது. ஆனால் தமிழர்கள் அறிந்து கொள்வதில் தோஷம் இல்லையே. தங்களுக்கு இதெல்லாம் ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்கும் என்றே எழுதுகிறேன்.

கல்கி இங்கேதான் இருக்கிறார்கள். அவர்களது மனைவியாரும் குழந்தைகளும் இரண்டொரு நாளில் இங்கே வந்துவிடுவார்கள். கொஞ்சநாள் குற்றால வாசம் வைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணம். ஆகவே குற்றாலத்திலும் ஜமா ஏற்படுகிறது.

பண்டிட் சவாரிராயபிள்ளை அவர்கள் எனக்கு 7 ஏ கிளாசில் ஆசிரியர். என்னிடம் எப்பொழுதும் மிக்க அன்பு காட்டி வந்தவர்கள்.

அவர்களது பேரன் சவரிமுத்துப்பிள்ளை அவர்களும் தமிழில் நல்ல உணர்ச்சி உடையவர்களாய் இருக்கிறார்கள். திருத்தங்களை அறிகிறதென்றாலே தமிழில் உணர்ச்சி இருக்கவேண்டும் என்பது ஏற்படுகிறது. மிக்க சந்தோஷம். தங்களுக்கு அந்த தீவாந்திரத் தரத்தில தற்காலத்தில் வறண்ட பண்டிதரோடு பழகும் துர்பாக்கியம் இல்லாமல் நல்ல தமிழ் அறிஞரோடு சத்காலலேபம் செய்ய வாய்த்தது பற்றி ரொம்ப சந்தோஷம்.

திருப்புகழ்மணி 'முன்னம்நீ அன்னை' என்கிற பாட்டை அனுபவித்திருக்கிறார்கள். அனுபவிக்க வேண்டிய பாட்டுத்தான். பாவம் உள்ள பாட்டுத்தான். துடைக்க வேண்டிய முக்கைத் துடைத்தாய்விட்டது. பாட்டுச் சரியாய்ப் போய்விட்டது.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்