பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

129


சா. கணேசனும் சகாக்களான பிரமுகர்களும் வருஷம் வருஷமாக உழைத்து வருவதெல்லாம் பயனில் சொல் பாராட்டுவாருக்காகத்தானா எல்லாம் கொஞ்சம் பக்தியோடு இருந்துவிட்டால் பெரிய மோளோவாகப் போய்விடும் கம்பர் விழா. சா. கணேசனுக்கு ஜே போடவேண்டியதுதான்.

தங்கள்
டி.கே. சிதம்பரநாதன்

குறிப்பு - இப்போது பழைய தண்டியலங்காரம்.

புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருக்கிறேன். உதாரணச் செய்யுள்களைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பண்டிதர்கள் ஏன் சூத்திரத்தோடு கட்டி அழுது கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. சூத்திரத்திலுள்ள விஷயங்கள் வெகுசாமான்யம். உதாரணச் செய்யுள்களோ அபாரம் சில செய்யுள்களாவது தொன்மை தழுவிய அழகான செய்யுள்களாக இருக்கின்றன.

ஒரு பாடல்

தலைவன் தான் பிழைகளை உணர்ந்து தலைவியிடம் எனக்கே அவமானமாக இருக்கிறது உன்னிடம் வர. உன்னைவிட்டுப் பிரிந்திருப்பது சகிக்க முடியாதபடி இருக்கிறது. அக்கினிப் பிரவேசம் செய்யலாமா என்றுகூடத் தோன்றுகிறது என்பதாக பாணனிடம் சொல்லிவிடுகிறான் தலைவன். எல்லாம் இந்தப் பயல் பாணனுடைய கட்டுமானச் சரக்குக்குத்தான் வேறொன்றும் இல்லையாக்கும் என்று தோழியிடம் சொல்லுகிறாள் தலைவி

நாண்போலும் தன்மனைக்குத்
தான்சேறல் இந்நின்ற
பாண்போலும் வெவ்வழலிய்ப்
பாய்வதூஉம் - காண்தோழி