பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடிதங்கள்

91




முகாம்
கல்கி
27.2.46

அருமை நண்பர் பாஸ்கரன் அவர்களுக்கு,

21.2.46 அன்று குற்றாலத்தை விட்டுப் புறப்பட்டேன். திருச்சியில் சோமுவும் அவனது சகாக்களுமாக வந்து சகல செளகரியங்களையும் செய்து கொடுத்து வழியனுப்பினார்கள். ஸ்டேஷனில் 25 நிமிடந்தான் வண்டி நின்றது. வந்தவர்கள் எல்லாரும் சோமு, சுகி, கணபதியா பிள்ளை, நடராஜ மூப்பனார், அருணாசல முதலியாரும் மனைவியாரும் எல்லாருமாகத் தங்கள் புத்தகத்தை ரொம்ப ரொம்பப் புகழ்ந்துவிட்டார்கள். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பாகம் ரொம்பப் பிடித்திருந்தது. ஒன்று தெரியவந்தது. மூப்பனார் விருந்தோம்பும் பாகத்தை ரொம்ப அனுபவித்துவிட்டார். அண்ணியைப் பார்த்து புத்தகத்தின் மூலமாகத் தங்களைப் பற்றியும் தோசையைப் பற்றியும் தெரிந்துகொண்டேன். தங்களைப் பார்க்கத்தான் முக்கியமாக வந்தேன். பார்த்துக்கொண்டேன். நமஸ்காரம். இனி குற்றாலத்துக்கு வருகிறேன் என்று ஒரு அத்தியாயம் படித்து முடித்தார். புத்தகத்துக்கு விமரிசனங்கள் இப்படி அல்லவா வரவேண்டும்.

புத்தகத்தைப் பார்க்க எனக்கு லஜ்ஜையாய் இருக்கிறது. வேறு எப்படி இருக்கும். இன்னும் அதிகமாக லஜ்ஜையாய் இருக்கிறது. புத்தகத்தைப் பற்றிய கல்கியின் விமரிசனம். விமரிசனத்தைப் பார்க்க எனக்குத்தான் லஜ்ஜையாய் இருக்கிறது, ஆனால் ரொம்ப ரொம்ப திருப்தியாய் இருக்கும் பாஸ்கரனுக்கு என்று சொன்னேன். இந்த விஷயம்தானே முக்கியம்.

தாங்கள் 25.2.46 அன்று எழுதிய கடிதம் கிடைத்தது. தாங்கள் செங்கோட்டைக்கு வராதது நல்லதுதான்.