பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணையற்ற வீரன் ஆரியப் பூண்டைக் கிள்ளி எறியாததால் இன்று கோடரிகொண்டு பிளக்கவேண்டிய சிரமம் ஏற்பட்டு விட்டது. முனிவர் என்றும், ரிஷிகள் என்றும் பெயர் வைத்துள்ள ஆரியப் பாதிரிகளே இதில் முன் னின்று வேலை செய்கிறார்கள். அதிருக்கட்டும். நாழிகையாகிறது-உணவருந்தலாம் - வருத்தந் தணி. சீக்கிரம் குமாரன் வந்துவிடுவான். அத்தியாயம் 4. —— 2.8 இடம்: காட்டுப்புறத்திலுள்ள கூடாரத்தின் பக்கத்தில் ஒரு தனித்த இடம். பாத்திரங்கள்: ப்ரகலாதன், காங்கேயன், கஜகேது,சித்த பானு, மகரிஷி ஒருவர். காங்கேயன்:- என்னையும் கூடாரத்திலுள்ள மற்றும் உனது உடற்காப்பாளரையும் இங்கு விட்டு விட்டு இத்தனை நாள் எங்கே போயிருந்தாய்? ப்ரகலாதன்:- நீயும் நானும் சற்றுத் தூரத்திலுள்ள சிங்காரவனத்திற்குச் சென்றோமல்லவா? காங்கேயன்:- நீ என்ன கணவா கண்டாய்? சிங்கார வனத்திற்கு நானுமா வந்தேன்? ப்ரகலாதன்:- இன்னும் அதிக ளள் ஆகவில்லையே? அதற்குள் மறந்தாயே! காங்கேயன்:- நான் மறந்துவிடவில்லை. நீதான் ஏதே தோ உளறுகிறாய்.