பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 இரணியன் இரணியன்:- உண்மைதானா? அந்தோ! அறியாமை யென்பது மக்களால் இவ்வாறு பாராட்டப்பட்டு விட்டதா? அயோக்கியத்தனம் மக்களுக்கு கரும் பாகத் தோன்றிவிட்டதா ? சரி; கீ போய் உன் அன் னையைப் பார். அவன் உன் வரவுகோரி ஆவலாயிருக்கிறான். சீக்கிரம் உனக்கு இளவரசுப் பட்டம் கட்டப்போடுறோம். வெகு [இச்சமயம் சேனாதிபதியும் சேவகர்களும் வந்து சக்ரவர்த்தியைப் பணிகிறார்கள்.] இரணியன்:- வீரத்தமிழனே! என்ன? உற்சாக மென்பது உள் முகத்தில் சிறிதும் காணப்பட வில்லையே? தண்டனையை நிறைவேற்றி விட்டாயா? சேரைதிபதி:- ராஜாதிராஜரே! குற்றவாளிகளை அழைத்துக்கொண்டு கொலைக்களத்தை காடிச் சென்றேன். என்னுடன் நான்கு கொலையாளி களும் வந்தார்கள். கொலைக்களத்தையடைந்த வுடன் திடீரென்று ஓர் ஒளி தோன்றிற்று. அவ் வளவுதான் தெரியும். மூச்ச்சையற்றுக் கிடந்த என்னை இந்தச் சேவகர்கள் வந்து எழுப்பினார்கள். வட்டப்பாறையில் கொலையானிகள் கால்வரும் வெட்டப்பட்டுக் கிடந்தார்கள். குற்றவசனிக ளாகிய ஆரியர்களைக் காணவில்லை. (பாட்-ே 15) இரணியன்:- [கோபமாய்) துரோகியே! நீ யாரிடம் பேசுகிறாய்? இக்நாள்வரைக்கும் தமிழர்களின்